ராக்கெட் வேகத்தில் முடியை வளர செய்யும் வெந்தயம். தாறுமாறான முடி வளர்ச்சியை பார்த்து மிரண்டு போயிடுவீங்க.

hair
- Advertisement -

அதிவேகமான முடி வளர்ச்சிக்கு ஒரு சிறப்பான குறிப்பு இது. அதேசமயம் இயற்கையான இரண்டு பொருட்களை தான், இந்த குறிப்பில் நாம் பயன்படுத்த போகின்றோம். வெறும் இரண்டு பொருட்களை வைத்து தலை முடியை இவ்வளவு சீக்கிரமாக வளர வைக்க முடியும் என்றால், அது நிச்சயமாக இப்படி ஒரு குறிப்பால் மட்டும் தான் முடியும். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் அந்த இரண்டு பொருள் என்ன. அதை சுலபமான முறையில் குறிப்புக்கு எப்படி பயன்படுத்தலாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதல் பொருள் வெந்தயம் என்பது தலைப்பை படித்திருக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாவது பொருள் ஆளிவிதை. ஆங்கிலத்தில் இதை flex Seed என்று சொல்லுவார்கள். (இது ஒரு சூப்பர் காம்பினேஷன்.) மறுநாள் காலை இந்த குறிப்பை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றால், முந்தைய நாள் இரவே இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு ஊற வைத்திருக்கும் வெந்தயத்தை தண்ணீரோடு ஊற்றி விடுங்கள். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் இதை கொதிக்க வைக்க வேண்டும். ஆளி விதை நன்றாக கொதித்து வரும்போது தண்ணீர் ஜெல் போல மாறிவிடும். ரொம்பவும் கட்டி ஜெல் போல இருக்கக் கூடாது. இது நமக்கு கொஞ்சம் லிக்விட் ஆகத்தான் இருக்க வேண்டும். அதாவது முட்டையின் வெள்ளைக்கரு போல கொழகொழப்பாக நமக்கு லிக்விட் தேவை.

மொத்தமாக அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, ஏழு நிமிடம் இந்த கலவையை சூடு செய்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, இந்த கலவையானது கொஞ்சம் சூடாக இருக்கும் போதே ஒரு வடிகட்டியில் ஊற்றி ஸ்பூனை வைத்து அழுத்தி ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆளிவிதை ஜெல்லோடு வெந்தயத்தின் பவரும் சேர்ந்து இருக்கிறது. இந்த ஜல்லை தலைக்கு அப்ளை செய்ய வேண்டும். தலைக்கு இந்த ஜெல்லை போடுவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு மணி நேரம் தேங்காய் எண்ணெய் முடியில் நன்றாக ஊறியதும் இந்த ஜல்லை மயிர் கால்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து விட வேண்டும். மீதம் இருக்கும் ஜல்லை முடியின் நுனி வரை தடவி விட்டு, ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு வழக்கம் போல ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு உங்களுடைய தலையை அலசிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களை இப்படி பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? இது தெரிஞ்சா இந்த பொருளை குப்பையில் போட்டிருக்க மாட்டேனே!

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வர மூன்றே மாதத்தில் அடுத்தவர்கள் பார்த்து மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு உங்களுடைய முடி வளர்ச்சி இருக்கும். அதே சமயம் முடி சில்க்கியாக அழகாக நீளமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -