இன்று மாசி அமாவாசை! இன்று இரவுக்குள் இந்த 1 விஷயத்தை மட்டும் செய்துவிட்டால் நீங்கள் நினைத்த குறிக்கோளை உடனடியாக அடையலாம்.

sivan2
- Advertisement -

பொதுவாகவே அமாவாசை தினத்தில் இந்த பிரபஞ்சத்தில் நேர்மறை ஆற்றல் கூடுதலாக கிடைக்கும் என்பது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கை. காரணம் மறைந்த முன்னோர்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறக்கூடிய நாள் இது, அதேசமயம் குலதெய்வம் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இது. பிரபஞ்சத்திலிருந்து நேர்மறை சக்தி பூமிக்கு அதிகமாக வரும் நாள். நாம் சில நல்ல விஷயங்களை அடைய வேண்டும் என்றால் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய தினத்தில் நாம் முக்கியமாக என்னென்ன விஷயங்களை ஆன்மீக ரீதியாக செய்யலாம் என்பதை பற்றிய தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வாழ்க்கையில் தடையாக இருப்பதை எல்லாம் தடை இல்லாமல் மாற்றுவதற்கு பின் சொல்லக் கூடிய விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தாலே போதும்.  குறிப்பாக அமாவாசை தினத்தில் சோடச கலை நேரம் என்ற அற்புதமான சக்திவாய்ந்த நேரம் நமக்கு சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்று அந்த சோடச கலை நேரம் எந்த நேரத்தில் வருகிறது, அந்த சோடசக் கலை நேரத்தை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும், என்பதை பற்றிய குறிப்பும் இந்தப் பதிவின் இறுதியில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் பதிவைப்படித்து பயன்பெறலாம்.

- Advertisement -

கர்ம வினைகள் தீர அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்:
நம் வாழ்வில் நடக்கக்கூடிய நல்லது கெட்டது எல்லாவற்றிற்குமே காரணம் செய்த கர்மவினைகள் தான். கர்ம வினைகளை போக்குவதற்கு எத்தனையோ பரிகாரங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், எல்லோராலும் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் என்றால் அது அன்னதானம் தான். உங்களுடைய கையால் ஒரு லட்சம் உயிர்களுக்கு அன்னதானம் செய்து விட்டால் உங்களுடைய கர்ம வினைகள் எல்லாம் குறைந்து விடும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யக்கூடிய வசதி நாம் எல்லோரிடத்தும் இருக்கிறதா. நிச்சயம் இல்லை. ஆனால் ஒரு லட்சம் எரும்பு களுக்கு சாப்பாடு போட முடியும். இந்த அமாவாசை தினத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். பச்சரிசி வெல்லம் கலந்த கலவையை உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள். இறைவனை வழிபாடு செய்து முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கோவிலுக்கு அருகில் இருக்கும் மரங்கள் புற்றுகள் பக்கத்தில் இந்த பச்சரிசி வெல்லம் கலந்த கலவையை உங்கள் கையால் தூவி விட்டு வாருங்கள்.

- Advertisement -

மாசி மாத அமாவாசை சோடசக்கலை நேரம்:
சோடசக்கலை நேரம் என்பது சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட அற்புதமான ஒரு நேரம். இந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக ஒரு இடத்தில் வீட்டிலேயே அமர்ந்து, இந்த பிரபஞ்சத்தை நினைத்து, எம்பெருமானை நினைத்து உங்களுக்கு வேண்டிய வரங்களை நேர்மறையாக கேட்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், நிறைய பணம் கிடைத்துவிட்டதாகவும், தொழிலில் வெற்றி பெற்று விட்டதாகவும், நல்ல வேலை கிடைத்து விட்டதாகவும், கை நிறைய சம்பளம் வாங்கி விட்டதாகவும், வீடு கார் நகைநட்டோடு ஆடம்பரமாக வாழ்வதாகவும் நேர்மறையாகவே நினைத்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தால் நீங்கள் கேட்டதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

இன்று அம்மாவாசை. அதாவது 20-02-2023 ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 12.47 மணி முதல் 2.47 வரை சோடசக்கலை நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு மணி நேரத்தில் ஏதாவது ஐந்து செகண்ட் நமக்கு மும்மூர்த்திகளின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ஐந்து செகண்ட் எது என்று மட்டும் நமக்கு தெரியாது. ஆக மொத்தம் அந்த ஐந்து வினாடிகள், இந்த இரண்டு மணி நேரத்திற்குள் தான் அடக்கம். ஆக இந்த இரண்டு மணி நேரத்தை தவறவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி வரங்களை கேட்டுப்பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இந்த செடி இருந்தால் அது வளர்வதை போல் உங்கள் வீட்டில் பண வரவும் அதிகரித்துக் கொண்டே செல்லும். நம்மை தேடி பணத்தை வர வைக்கும் அதிசய செடி.

எதுவுமே இல்லையா, கண்களை மூடி அமர்ந்து இந்த இரண்டு மணி நேரமும் மனதை ஒருநிலைப்படுத்தி ‘ஓம் ரீம் சிவசிவ’ என்ற மந்திரத்தை சொன்னால் நீங்கள் கேட்காமலேயே எல்லா வரங்களையும் அந்த எம்பெருமான் உங்களுக்கு வழங்கி விடுவார் என்பதும் நம்பிக்கை. ஒரே மாதத்தில் கேட்டதெல்லாம் கிடைத்து விடும் என்பது கிடையாது. மாதம் தோறும் இந்த கலையை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி. மேல் சொன்ன விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் பின்பற்றுங்கள் பலன் பெறுங்கள்.

- Advertisement -