சமையலறையில் இந்த செடி இருந்தால் அது வளர்வதை போல் உங்கள் வீட்டில் பண வரவும் அதிகரித்துக் கொண்டே செல்லும். நம்மை தேடி பணத்தை வர வைக்கும் அதிசய செடி.

kitchen money jasmine
- Advertisement -

ஒவ்வொரு மனிதனின் பணத் தேவையும் நாளுக்கு நாள் கொண்டே தான் அதிகரித்து செல்கிறது. இந்த பணத் தேவையை சமாளிக்க நாமும் எவ்வளவு வழிகளில் பாடுபட்டு உழைத்தாலும் போதவில்லை என்ற நிலை தான் எங்கும் நிறைந்திருக்கிறது. இந்த நிலை மாற வீட்டில் செய்யும் இந்த ஒரு சின்ன மாற்றம் பண வரவை ஈர்த்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பது குறித்து இந்த ஆன்மீகம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பண வரவை அதிகரிக்க பல்வேறு வாஸ்து செடிகளை பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம். குறிப்பாக செம்பருத்தி, துளசி, மல்லி, மருதாணி போன்ற செடிகள் நம் வீட்டில் வளர்த்து வரும் போது பணவரவை நமக்கு ஈர்த்துக் கொடுக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் என்றும் நிறைந்திருக்கும் என்பது எல்லாம் நாம் அறிந்து ஒன்று தான். பண வரவிற்கென்றே வளர்க்கப்படும் மற்றொரு முக்கியமான செடி மணி பிளான்ட். பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் இந்த மணி பிளான்ட் செடி இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை எப்படி வளர்க்க வேண்டும் எங்கு வைத்து வளர்க்க வேண்டும் என்பதை எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவிற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான இந்த செடி வளர்ப்பு பரிகாரத்தை நம் வீட்டில் சமையல் அறையில் தான் செய்ய வேண்டும். பெரும்பாலும் நம் வீட்டின் சமையலறை நாம் கிழக்கு பார்த்து நின்று சமைக்கும் வண்ணம் தான் அமைந்திருக்கும். இப்படி இருக்கும் சமையலறையில் நம்முடைய வலது பக்கத்தில் எப்போதும் உப்பு ஜாடி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த உப்பு ஜாடியில் கல் உப்பை எப்போதும் நிறைவாக வைத்து இருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள்ளாக சுக்கிர ஓரையில் கல் உப்பை புதிதாக கடையிலிருந்து வாங்கி வந்து அதை உப்பு ஜாடியில் நிறைத்து வைக்க வேண்டும். இப் படி செய்யும் போது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அந்த உப்பு ஜாடியின் அருகில் ஒரு கண்ணாடி குடுவையை வைத்து அதில் ஆறு இலைகள் மட்டுமே இருக்கும் மணி பிளான்ட் செடியை வாங்கி வந்து வளர்க்க வேண்டும். இந்த செடியை நாம் யார் வீட்டில் இருந்தும் கொண்டு வரக் கூடாது. அதே சமயம் தெரியாமல் கொண்டு வருவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. கடைகளில் விலை கொடுத்து வாங்கி கண்ணாடி குடுவையில் போட்டு வளர்க்க வேண்டும்.

இதை வீட்டில் சமையல் அறையில் உப்பு ஜாடியின் பக்கத்திலே வைக்க வேண்டும். நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜை செய்யும் போது சுவாமிக்கு கற்பூரத்தை தீபராதனை காட்டுவது போலவே உப்பு ஜாடிக்கும் அதன் அருகில் இருக்கும் மணி பிளாண்ட் செடிகளுக்கும் தொடர்ந்து பூஜை செய்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். சிவபெருமானின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்துவிடும்.

இந்த மணி பிளாண்ட் செடி எப்படி செழித்து வருகிறதோ அதே போல நம் குடும்பத்திலும் பணவரவு அதிகரித்து செல்வ செழிப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -