மாதவிலக்கு முடியும் நாளில் பெண்கள் இதை மட்டும் செய்தால் போதும். தீட்டினால் வரக்கூடிய தோஷங்கள் எதுவும், குடும்பத்திற்கு கஷ்டத்தை தராது.

women7
- Advertisement -

இயற்கையாகவே பெண்களுக்கு அந்த ஆண்டவனால் படைக்கப் பட்டது தான் இந்த மாதவிலக்கு. இந்த மாத விலக்கு காலத்தில் பெண்கள் எதற்காக தனியாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டது. இதில் அறிவியல் ரீதியாகவும் நிறைய காரணங்கள் மறைந்துள்ளன. பெண்கள் மிகவும் மென்மையானவள். அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாத அந்த சமயத்தில் அவர்களால் கடினமான வேலைகளை செய்ய முடியாது. அப்படி கடினமான வேலைகளை செய்தால் அதன் மூலம் அவர்களுக்கு கர்ப்பப்பை உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரக்கூடும் என்பதற்காகத்தான் பெண்களை அந்த மாதவிலக்கு நாட்களில் தனியாக இருக்கவேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

women1

மாதவிலக்கு சமயத்தில் உடல் சூடு பெண்களுக்கு அதிக மாக இருக்கும் அதனால் தான், அந்த ஐந்து நாட்களும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற முறையையும் பின்பற்றி வந்தார்கள். காலப்போக்கில் அதை நாம் தீட்டு, வீட்டுக்கு ஆகாது என்று ஒதுக்கி வைத்துவிட்டோம்.

- Advertisement -

நீங்கள் இந்த மாதவிலக்கு நாட்களை எப்படி பார்த்தாலும் சரி, ஆன்மீக ரீதியாக எடுத்துக் கொண்டால் தோஷங்கள் விலக இந்த பரிகாரத்தை செய்யலாம். மாதவிலக்கு என்பது அறிவியல் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்று எடுத்துக் கொண்டாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

women8

பெண்களுக்கு மாதவிலக்கு முடிந்த ஐந்தாவது நாள் தோஷங்கள் விலக வேண்டும் என்றால், மூன்று எண்ணெய்கள் சேர்த்த கலவையை உச்சந்தலையில் வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். மூன்று எண்ணெய்கள் என்றால் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இந்த மூன்று எண்ணெய்களை பயன்படுத்தலாம். மூன்றிலிருந்து ஒவ்வொரு சொட்டு எடுத்து ஒன்றாக கலந்து உச்சந்தலையில் வைத்து தலைக்கு குளித்து விட வேண்டும், மாதவிலக்கு ஏற்பட்ட ஐந்தாவது நாள்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த தீட்டு சமயத்தில் நம்முடைய உடலுக்கு உள்ளே இருக்கும் தோஷங்கள் விலக வேண்டும் என்றால், மாதவிலக்கு முடிந்து ஐந்தாவது நாள் பெண்கள் வேப்பங்கொழுந்தை சாப்பிடவேண்டும். வேப்ப இலையை பறித்து அரைத்து உருண்டை செய்து சிறிய கோலி குண்டு அளவு உருண்டையை விழுங்கி விட்டால், அவர்களுக்கு மாதவிலக்கு நாட்களில் உடல் ரீதியாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் அது விளங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

veppailai

இதோடு மட்டுமல்ல, நீங்கள் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தாலும் அதன் மூலம் உங்களுடைய உடலுக்கோ வீட்டிற்கோ எந்த தோஷமும் ஏற்பட கூடாது என்றாலும் இந்த வேப்ப இலையை, வேப்ப இலை கொழுந்தை ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் அனைவருமே, சாப்பிடும் வழக்கத்தை வைத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

vepilai

வேப்ப இலை கசப்பு தன்மை கொண்டது. கிருமிகளை பூச்சிகளை அழிக்க கூடியது. மாதவிலக்கு ஏற்படும் சமயத்தில் நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மூலம் சில கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு வேப்பிலை ஒரு நல்ல தீர்வு. குறிப்பாக இந்த காலத்தில் மாதவிலக்கு சமயத்தில் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். வேலைப்பளு அதிகமாக தான் இருக்கின்றது. இதனால் பிரச்சினைகள் வராமல் இருக்க கட்டாயம் எல்லா பெண்களும் இந்த வேப்பிலையைச் சாப்பிடுவது நன்மையைத் தரும்.

women1

இதை போல் தான் இறந்தவர்களுடைய வீட்டிற்கு சென்று வரும் பட்சத்தில் இறந்தவர்களுடைய உடம்பில் இருந்து வெளிவரக்கூடிய கெட்ட ஆற்றல் நம்மை அறியாமலேயே நம் உடம்பை தாக்கி இருந்தால், அதை அழிப்பதற்கும் இந்த வேப்ப இலை ஒரு நல்ல மருந்து.

amman-neem-tree

வேப்ப இலையை நீங்கள் மருந்தாக பார்த்தாலும் சரி, அம்மன் வடிவமாக பார்த்தாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம். இந்த வேப்பிலையை நாம் உட்கொள்வதன் மூலம் ஆன்மீக ரீதியாக தோஷங்கள் விலகும். அறிவியல் ரீதியாக உடலில் இருக்கும் கெட்ட கிருமிகள் செத்துப் போகும். அவ்வளவு தான். நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -