இந்த ஒரு சிறு பொருளை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தால் போதும். செல்வ செழிப்புடன் கூடிய ஆரோகோயாமான வாழ்வை பெற இது உதவும்.

madhulai neivedhiyam
- Advertisement -

நம் அன்றாட வாழ்வில் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்பது அனைவரும் மேற்கொள்ளும் செயலே, அச்செயலின் மூலமாக நாம் வேண்டுவது என்ன? பல பேருக்கு பல கோரிக்கைகள் இருந்தாலும், அனைவராலும் பொதுவாக வேண்டும் விஷயம் என்னவென்றால், நம் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும், செழிப்புடனும், காரிய தடைகள் இன்றியும், வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பது தானே. அவ்வாறு நம் குடும்பம் மேன்மை அடைய நாம் செய்ய வேண்டிய செயல் என்னவென்று இப்பதிவின் மூலம் நாம் காண்போம்.

நாம் தினமும் இறைவனை வேண்டுகிறோம் அவ்வாறு வேண்டும்பொழுது ஒரு சிறு பொருளை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்வதன் மூலம் நம்முடைய குடும்பம் மேன்மை அடையும். அப்பொருள் என்னவென்று அறிந்து நீங்களும் தினமும் அப்பொருளை நெய்வேத்தியம் செய்து உங்கள் குடும்பம் மேன்மை அடைய செய்யுங்கள்.

- Advertisement -

நாம் அன்றாட வாழ்வில் பார்த்து ருசித்த பழம் தான் மாதுளை. பொதுவாக மாதுளை செடியை வீட்டில் வைப்பதன் மூலமாக மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் அச்செடியில் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. அதன் மூலம் நம் குடும்பத்தில் எந்தவித குறைபாடும் இன்றி செல்வ செழிப்புடன் வாழலாம் என்று கூறுவார்கள்.

அப்படிப்பட்ட மாதுளை செடியில் இருந்து கிடைக்கும் மாதுளம் பழத்தை வைத்துத்தான் நாம் இந்த நெய்வேதியத்தை செய்யப் போகிறோம். மாதுளை மகாலட்சுமியின் கடாட்சமாக கருதப்படுகிறது. நாம் தினமும் இறைவனுக்கு காலையில் விளக்கேற்றுவோம் அல்லவா? அவ்வாறு விளக்கேற்றும் போது ஒரு மாதுளை பழத்தை எடுத்து, அதை இரண்டாக பிளந்து, அதில் சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். பிறகு அதை நெய்வேத்தியமாக இறைவனுக்கு படைத்து வணங்கி வரவேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கடன் அடையவும், வாரா கடன் திரும்ப கிடைக்கவும் பைரவருக்கு இப்படி வழிபாடு செய்தால் போதும்.

அவ்வாறு வணங்கிய பிறகு, அந்த பழத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும். இவ்வாறு தினமும் நாம் செய்து வரும் போது, நம்முடைய குடும்பம் மேன்மை அடைவதை கண்கூடாக பார்க்கலாம். பிள்ளைகள் நன்றாக படிப்பது, காரிய தடை விலகுவது, செல்வ செழிப்பு ஏற்படுவது, குடும்பத்தில் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்வது போன்ற அனைத்து விஷயங்களும் நடைபெறும். இந்த பழத்தை நீங்களும் தினமும் இறைவனுக்கு நெய்வேத்தியமாக வைத்து வணங்கி உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரசாதமாக கொடுங்கள். உங்கள் குடும்பத்தை மேன்மை அடைய செய்யுங்கள். நன்றி.

- Advertisement -