அதிகமான பண வரவை கொடுக்கக்கூடிய அதிர்ஷ்ட குளியல். தினம் தினம் இந்த தண்ணீரில் குளித்தால் பண மழையில் நனையலாம்.

mahalashmi
- Advertisement -

நம் கையில் இருக்கக்கூடிய பணம் பல மடங்காக பெருகாமல், அப்படியே இருந்தாலும் அதன் மூலம் நமக்கு எந்த லாபமும் கிடையாது. பணத்தை செலவு செய்ய போவதும் கிடையாது. கையில் இருக்கும் பணத்தை ஏதாவது முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க போவதும் கிடையாது. பின்பு பணம் இருந்து என்னதான் பயன். ஒன்று, கையில் பணம் இருந்தால் அதை சந்தோஷமாக செலவு செய்து நல்லபடியான வாழ்க்கையை வாழுங்கள். அப்படி இல்லை என்றால் அந்த பணத்தை பிரயோஜனமாக வேறு ஏதாவது ஒரு காரியத்திற்கு பயன்படுத்துங்கள். எதுவுமே செய்யாமல் பெட்டிக்குள் பூட்டி வைக்கும் பணம்மும், வெறும் காகித பேப்பருக்கு சமம் தான்.

பணம் என்றாலே அது பயன்பாட்டிற்கு தான். முதலில் நீங்கள் இதை உணர்ந்து கொள்ளுங்கள். பதுக்கி பதுக்கி வைத்து பணத்தை எதுவுமே செய்யப் போவது கிடையாது. இன்று காலம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் நாளை இல்லை. இன்றே வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிப்பிற்குள் செல்வோம். அதற்காக ஒரு ரூபாய் கூட சேமிப்பு தேவை இல்லை என்று சொல்லவில்லை. சேமிப்பு அவசியம் தான். தேவைக்கு அதிகமாக மூன்று தலைமுறைக்கு நான்கு தலைமுறைக்கு என்று சொத்து சேர்க்காதீர்கள். அதிகமான பண வரவை கொடுக்கக்கூடிய அதிர்ஷ்ட குளியலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பொதுவாகவே மகாலட்சுமி வழிபாட்டிற்கு இந்த மாதுளை முத்துக்கள் மிகவும் உகந்தது என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும். வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமிக்கு மாதுளை முத்துக்களை பிரசாதமாக வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ செழிப்பும் லட்சுமி கடாட்சமும் பெருகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

மாதுளை பழத்தை வாங்குகிறீர்கள். முத்துக்களை எடுத்து விட்டு தோலை குப்பையில் போட வேண்டாம். தோலில் ஈரம் போக லேசாக காய வைத்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதுள பழ தோலை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு குளிக்க வேண்டும். குளிப்பதற்கு தயாராக வெதுவெதுப்பாக தண்ணீரை எடுத்து வைத்து விட்டீர்கள். அதில் இந்த மாதுளை பழ தோலில் இருந்து இரண்டு துண்டை எடுத்து போட்டு விடுங்கள். பத்து நிமிடம் அந்த தண்ணீரிலேயே அந்த பழத்தோல் ஊறட்டும்.

- Advertisement -

அதன் பின்பு நீங்கள் எப்போதும் போல அந்த தண்ணீரில் குளித்து விடலாம். இப்படி செய்தால் உங்கள் உடம்பை பிடித்த பீடை ஓழியும். உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசும். சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படவீர்கள். லட்சுமி கடாட்சம் பெருகி உங்களுடைய குடும்பத்திற்கு வருமானம் அதிகரிக்கும். இந்த குளியலை குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி குளிப்பது சிறப்பு. பிள்ளைகள் குளிப்பதாக இருந்தாலும் அவர்கள் குளிக்கின்ற தண்ணீரிலும் இந்த மாதுளை பழ தோல் போடலாம். தவறு ஒன்றும் கிடையாது.

தினமும் இந்த தண்ணீரில் குளிக்க முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது குளிக்கின்ற தண்ணீரில் மாதுளை பழத்தோலை போட்டு குழியுங்கள். நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறிவிடுவீர்கள். குளித்து முடித்த பின்பு மாதுளை பழ தோல்களை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். எல்லோராலும் செய்ய முடியும். முயற்சி செய்து பார்த்து அனைவரும் நல்ல பலனை பெற வேண்டும் என்று அந்த மகாலட்சுமி தாயாரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -