மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இப்படி தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவர்களை திருமணம் செய்பவர்களும் மிகுந்த அதிர்ஷ்டசாலி தான்

couple-astro
- Advertisement -

பிறந்த குழந்தைகளுக்கு முதலில் அனைவரது வீட்டிலும் செய்யப்படுவது அவர்கள் பிறந்த நேரத்தை பொறுத்து அவர்களுக்கான ராசி, நட்சத்திரம் என்ன? அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பார்ப்பது தான் வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு ஆன்மீகத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த நட்சத்திரங்களை பொறுத்து தான் ஒவ்வொருவரின் குணநலன்களும் இருக்கிறது என்பது ஐதீகமாகும். அவ்வாறு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு என்று ஒவ்வொரு விதமான தனி சிறப்புகள் இருக்கின்றது. அப்படி 27 நட்சத்திரங்களில் ஒன்றான இந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எதை செய்தாலும் அவை தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. இந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் அனைத்து விதமான குணநலன்களைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தெளிவான சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிகப்படியான ஆற்றல் நிறைந்திருக்கும். மகம் நட்சத்திரம், சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரமாக இருக்கிறது. எனவே இவர்கள் எந்த விஷயத்தை செய்தாக இருந்தாலும் பாட்டு போடு அதை தனித்துவமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

- Advertisement -

இவர்களிடம் பேசும் பொழுது மிகுந்த கவனத்துடன் பேசவேண்டும். பேச்சிலும் மற்றவர்களிடம் வாதம் செய்வதிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருப்பார்கள். நாடகம், பாட்டு, ஓவியம் வரைதல் போன்ற கலைகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக திகழ்வார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இருபது, இருபத்தி ஐந்து வயது வரை கல்வி மற்றும் எதிர்காலத்தின் மீது கவனம் கொண்டு செயல்பட்டால், அவர்களின் வாழ்க்கை நல்லவிதமாக அமையும். முப்பது, நாற்பது வயதிற்கு மேல் சந்திரதிசை ஆரம்பிக்கும். அப்பொழுது வாழ்க்கையில் சில இக்கட்டான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். அதுபோன்ற தருணங்களில் மனம் தளராமல் மிகுந்த தைரியத்துடன் செயல்பட வேண்டும்.

- Advertisement -

இவர்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இளம் வயதிலேயே சுக்கிர தசை ஆரம்பித்து விடுவதால் இவர்களிடம் பணம், பொருள், செல்வம் அனைத்தும் அதிகப்படியாக இருக்கும். என்றாலும் இவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை போட்டு குழப்பிக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் வேலை செய்வதை விட சொந்தமாக தொழில் செய்வதில் தான் விருப்பமாக இருப்பார்கள். எந்த வேலையை எடுத்தாலும் அதனை விடாப்பிடியாக முடித்து காட்டுவார்கள். இவர்களுக்கு ஏற்ற நட்சத்திரம் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், பூராடம், அஸ்தம், அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி. இவர்களுக்கு பொருந்தாத ராசிகள் மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, திருதியை, உத்திரம், விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி.

- Advertisement -