08-03-2024 மகா சிவராத்திரி அன்று யோகம் பெறக்கூடிய மூன்று ராசிகள்

sivan2
- Advertisement -

இரவு முழுவதும் தூங்காமல் சிவபெருமானை நினைத்து கண் விழித்து, வழிபாடு செய்யக்கூடிய ஒரு அற்புதமான நாள் தான் இந்த மகா சிவராத்திரி. இந்த வருடம் 8-3-2024ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த மகா சிவராத்திரி வரவிருக்கின்றது. வருடம் தோறும் இந்த சிவராத்திரி வரும். ஆனால், மற்ற வருடம் போல இந்த சிவராத்திரி கிடையாது. இது ஒரு அபூர்வமான சிவராத்திரியாக சொல்லப்பட்டுள்ளது.

300 வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு சிவராத்திரியை நாம் கொண்டாடி இருக்கின்றோம். 300 வருடங்களுக்குப் பிறகு அதே போல அதிசக்தி வாய்ந்த சிவராத்திரியானது நாளை வரவிருக்கின்றது. நாளைய சிவராத்திரிக்கு அப்படி என்ன சிறப்பு இருக்குது. இந்த சிவராத்திரியின் மூலம் யோகம் பெறப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யார் யார். ஜோதிடம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் மகா சிவராத்திரி

திருவோண நட்சத்திரம், வெள்ளிக்கிழமை, பிரதோஷம், சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம் ஆகிய 5 யோகங்களும் ஒன்று கூடி இந்த சிவராத்திரி நாளில் வந்திருக்கிறது. இதுபோல ஒரு அதிசய சக்தி வாய்ந்த நாளை நாம் திரும்பவும் பார்க்க வேண்டும் என்றால் இன்னொரு 300 வருடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிவராத்திரி நாளை நாம் தவற விடலாமா. நாளை மறக்காமல் எல்லோரும் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும். சிவபெருமானின் அருள் ஆசி எல்லோருக்கும் முழுமையாக கிடைக்கும்.

மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்

இந்த மகா சிவராத்திரி தினத்தில், செவ்வாய் மற்றும் சந்திரன் மகர ராசியில் இணையப் போகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய சந்திர மங்கள யோகத்தால் ஜோதிடத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இப்போது பார்த்துவிடலாம்.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சிவராத்திரிக்கு பிறகு வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்கள் இருக்கும். நீங்க எவ்வளவு உழைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே செல்வீர்கள். தோல்வி என்பதே உங்களுக்கு இருக்காது. தேவையில்லாத மன கஷ்டத்தில் சிக்கி துவண்டு போய் இருந்தவர்களுக்கு, எல்லாம் சிவராத்திரிக்கு பிறகு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. சிவராத்திரிக்குப் பிறகு உங்க மனசு தெளிவு பெறும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். இதுவரை நல்ல பெயரை எடுக்காதவர்கள் கூட, இனிவரும் காலகட்டத்தில் பெயர் புகழ் அந்தஸ்தோடு வாழத் தொடங்கி விடுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க போகிறது. வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு உண்டான வழியை அந்த ஈசன் காட்டிக் கொடுப்பான். நிறைய வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது. குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. சொத்து சுகம் சேர்க்கை இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த மன குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். தெளிவான முடிவை எடுக்கக்கூடிய திறமை உங்களுக்கு வந்து விடும். வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என்பதை அலசி ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவு எடுத்து சிக்கலான பிரச்சனையில் இருந்து கூட சுலபமாக வெளிவந்து விடுவீர்கள்.

நீண்ட நாள் கடன் பிரச்சனை சரியாகும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். அதன் மூலம் அதிக லாபத்தை பெறுவீர்கள். சிக்கலாக இருந்த கோர்ட்டு கேஸ் வழக்குகள், உறவுகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகளை விரட்டி அடிக்க ஈசன் பரிகாரம்

மேலே சொன்ன ஜோதிடம் சார்ந்த தகவல்கள் இந்த மூன்று ராசிக்கும் பொதுப்படையானவை. இதையும் தாண்டி அவரவருக்கு இருக்கும் சொந்த ஜாதகத்தை வைத்து சில மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம் என்ற தகவலுடன் ஜோதிடம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -