மகா சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

sivan manthiram
- Advertisement -

இந்த மாதத்தில் 8 .3 .2024 அன்று மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவனுக்கு பல விசேஷமான நாட்களும், விரத நாட்களும் இருந்தாலும், இந்த மகா சிவராத்திரியானது மிக மிக முக்கியமான ஒரு விரத நாள். இந்த நாளில் சிவபெருமானை வேண்டி வணங்கும் போது நாம் கேட்கும் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அப்படியான அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் நாம் சிவபெருமானை வேண்டி அன்றைய நாளில் துவக்கத்திலேயே சிவனின் இந்த ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும். இதன் மூலம் நம் வாழ்வில் அனைத்து செல்வ நலன்களையும் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மகா சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

சிவனை பணிவதற்கும் அவனை வணங்குவதற்கும் அவன் அருள் வேண்டும் என்பது வாக்கு. அப்பேற்பட்ட சிவபெருமானை வணங்குவதற்கும் அவன் அருளை பெறுவதற்கும் சிவராத்திரி போன்ற ஒரு விசேஷமான நாட்களை நாம் ஒரு போதும் தவற விடக்கூடாது.

அன்றைய தினத்தில் நாள் முழுவதும் உண்ணாமலும் இரவு முழுவதும் உறங்காமலும் விரதம் இருந்து சிவனை அடிபணிவோர் பல்லாயிரம் கணக்கானோர். இத்தனை பெரிய விரதங்களையும் நம்மால் அனுஷ்டிக்க முடியாது போனாலும் சிவனை நினைத்து அன்றைய நாளில் துவக்கத்திலே இந்த ஒரு மந்திரத்தை தவறாமல் அனைவரும் சொல்லுங்கள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்வதற்கு முன்பு அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையிலே எழுந்து குளித்து முடித்த பிறகு முதலில் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு சிவபெருமானை நினைத்து ஒரு விளக்கு ஏற்றி கொள்ளுங்கள். அது எந்த விளக்காக இருந்தாலும் பரவாயில்லை.

விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு வடக்கு நோக்கி தீபம் எறியும்படி பூஜை அறையில் தீபம் ஏற்றி வையுங்கள். இப்போது நீங்கள் தீபத்திற்கு பின் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் வடக்கு பார்த்தவாறு தான் அமர வேண்டும். அப்போது சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.

- Advertisement -

மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்!

இந்த மந்திரத்தை 54 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு விரதம் இருப்பவர்கள் விரதத்தை தொடங்கலாம். விரதம் இல்லாதவர் தங்களுடைய அன்றாட பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். அன்றைய நாள் முழுவதும் சிவபெருமானை சிந்தையில் வைத்து முழு மனதுடன் ஐயனை அடிபணி பவர் வாழ்க்கையில் நிச்சயம் அனைத்து நலன்களையும் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: துன்பம் விலக சொல்ல வேண்டிய மந்திரம்

வரக்கூடிய இந்நாளை தவற விடாமல் இந்த மந்திர வழிபாட்டை செய்து நம்முடைய குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ வழி தேடி கொள்ளலாம். இந்த மந்திர வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து சிவன் அருளை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளவும்.

- Advertisement -