நாளை மகா சிவராத்திரி 2023 ஜோதிட பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்! சிவராத்திரிக்கு பிறகு பெயர், புகழ், பதவி உயர்வு, பணம், அழிவில்லா செல்வம் இவைகளை பெறப்போகும் ராசிகள் எவை?

sivan-astro
- Advertisement -

சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் எல்லோருக்குமே நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வருடம் அதாவது நாளைய தினம் சனிக்கிழமை 18.2.2023 ஆம் தேதி சிவராத்திரி வரவிருக்கின்றது. செல்வ செழிப்பான வாழ்வு கிடைக்கும். வறுமை இல்லாத நிலை உண்டாகும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று ஜோதிடத்தின் படி, சூரியன், சனி, சந்திரன், இவர்கள் மூவரும் கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் சிவராத்திரி அன்று கும்பத்தில் சேர்ந்து இருப்பதால் யோகம் அடிக்க போகும் அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்க ராசி இந்த பட்டியலில் இருக்கா. பார்க்கலாம் வாங்க.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இது நாள் வரை வாழ்வில் இருந்த எல்லா கஷ்டங்களும் சிவராத்திரிக்குப் பிறகு ஒவ்வொன்றாக சரியாக தொடங்கும். வேலையே இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த கைநிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கும். இந்த வேலையை எல்லாம் செய்யவே முடியாது என்று கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலை எல்லாம் கூட, ஒவ்வொன்றாக நல்லபடியாக நடந்து முடியும் என்றால் பாருங்களேன்.

- Advertisement -

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இழுபறியாக இருந்த கோர்ட் கேஸ் வழக்குகள் எல்லாம் உங்களுக்கு சாதகமான முடிவை கொடுக்கும். இனி உங்களுக்கு ராஜ யோகம் தான்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு அற்புதமான பலன்கள் இனி வரப்போகும் நாட்களில் உண்டு. குறிப்பாக வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொல்லப்போனால் கடக ராசிக்காரர்களுக்கு உறிய கடவுள் சிவபெருமான் தான். நீங்கள் சிவபெருமானை தினம் தோறும் வழிபாடு செய்து வர வாழ்வில் துன்பமில்லை.

- Advertisement -

இனி வரும் காலகட்டத்தில் வராத பணம் எல்லாம் வீடு தேடி வரும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் உயரும். பலபேருடைய பாராட்டை பெற்று சந்தோஷம் அடைவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த சஞ்சலங்கள் எல்லாம் சரியாகிவிடும். இது எனக்கு ஒரு பெரிய பிரச்சனை, இது எனக்கு ஒரு பெரிய தலைவலி என்று, நிச்சயமாக ஏதாவது ஒன்று இருக்கும் அல்லவா. அந்த பிரச்சனையை சரி செய்யும் நேரம் காலம் வந்துவிட்டது. அந்த எம்பெருமான் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கப் போகின்றார்.

- Advertisement -

உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கப் போகிறது. நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த எல்லா நல்லதும் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லதாகவே நடக்கும். சிவராத்திரி வருவதற்குள் உங்கள் செவிகளில் நல்ல செய்தி கேட்கும். வியாபாரத்தில் செய்யும் வேலையில் எல்லாம் உயர்வு தான். கவலையே படாதீங்க. இனி உங்களுக்கு ராஜ யோகம் தான்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடந்து முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சஞ்சலங்கள் எல்லாம் குறையும். நிறைய பேர் பிரச்சனை கொடுத்து இருப்பாங்க. அவங்க எல்லாம் இப்போ உங்களுக்கு சாதகமாக பேசுவாங்க. எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

மேலதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டு, உங்களுக்கு சப்போர்ட் செய்வாங்க. வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை குறையும். மனதில் நிம்மதி பெறும். சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகம் கூட சில பேருக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே: நாளை சிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்ய இந்த 1 பொருளை வாங்கி கொடுத்தால் போதும். வாழும்போது நீங்கள் செல்வ செழிப்பில் குபேரர் ஆகலாம். வாழ்ந்து முடித்த பின்பு மோட்சத்தை அடையலாம்.

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் பொதுப்படையாக கிரகச்சாரங்களை வைத்து சொல்லப்பட்ட விஷயங்கள். இதையும் தாண்டி சில பேருக்கு அவர்களுடைய தலை எழுத்து, விதி என்ற ஒன்று இருக்கும். அது இறைவனால் எழுதப்பட்டது. அதை வாசித்து சொல்ல பூலோகத்தில் யாரும் இல்லை. ஆகவே எந்த நன்மை நடந்தாலும் அதற்கு அந்த ஈசனுக்கு நன்றி தெரிவியுங்கள்.

எந்த கஷ்டம் வந்தாலும், அந்த கஷ்டத்துக்கு பிறகு வர கூடிய நல்லதை எதிர்பார்த்து ஈசனை வேண்டிக் கொள்ளுங்கள். இந்த சிவராத்திரி நாளில் அனைவரும் சிவபெருமானை வழிபாடு செய்வோம். அனைவருக்கும் உண்டான நல்லதை, ஆசிர்வாதத்தை அந்த சிவபெருமான் வழங்குவார் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -