நாளை சிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்ய இந்த 1 பொருளை வாங்கி கொடுத்தால் போதும். வாழும்போது நீங்கள் செல்வ செழிப்பில் குபேரர் ஆகலாம். வாழ்ந்து முடித்த பின்பு மோட்சத்தை அடையலாம்.

sivan1
- Advertisement -

நாம் இறைவனை விரும்பி கேட்பது என்ன. வாழும்போது செல்வ செழிப்போடு வாழ வேண்டும். வாழ்ந்து முடித்து, இறந்த பிறகு மோட்சம் கிட்ட வேண்டும். அந்த சிவபெருமானின் பாதங்களில் முத்தி கிடைக்க வேண்டும். இவ்வளவு தானே வாழ்க்கை. தினமும் நெற்றியில் நீறு பூசும் போது, ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நம்முடைய நிலைமை இதுதான். இந்த சாம்பல்தான் என்பதை உணர்த்துவதற்காக தான் தினம் திருநீறு வைக்கின்றோம். இதை உணர்ந்த மனிதன் வாழ்வில் பக்குவப்படுவான். நிச்சயமாக தவறு செய்யமாட்டான். அதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சரி, நாளைய மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களை வாங்கி கொடுத்தால் என்னென்ன பலன் என்பதை பற்றியும், உங்களுடைய ராசிக்கு நீங்கள் எந்த பொருளை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வாங்கி தர வேண்டும் என்பதை பற்றியும், சில ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

குறிப்பாக குழந்தை வரம் கிடைக்க, நோய் நொடி இல்லாத வாழ்க்கையை வாழ, மன நிம்மதியான வாழ்க்கையை வாழ, சிவபெருமானுக்கு எந்த பொருட்களை அபிஷேகத்திற்காக வாங்கி தர வேண்டும் என்ற குறிப்பு இந்த பதிவின் இறுதியில் உங்களுக்காக.

சிவபெருமான் அபிஷேக பிரியர். உங்கள் கையால் பின் சொல்லக்கூடிய பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி கொடுத்தால் கூட, நிச்சயமாக அதற்கான பலன் உண்டு. உங்களுடைய தேவை எதுவோ அதை பூர்த்தி செய்ய ஒரு பொருளை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

உங்களுடைய ராசிப்படி சிவபெருமானுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய அபிஷேகப் பொருள்:
மேஷம் – மஞ்சள் பொடி
ரிஷபம் – திரவிய பொடி
மிதுனம் – அரிசி மாவு பொடி
கடகம் – பால்

சிம்மம் – தயிர்
கன்னி – பஞ்சாமிர்தம் அல்லது தேன்
துலாம் – இளநீர்
விருச்சிகம் – பழச்சாறு

- Advertisement -

தனுசு – விபூதி
மகரம் – பன்னீர்
கும்பம் – வில்வ இலை
மீனம் – சந்தனம்

இவை பொதுப்படையானவை. உங்களுடைய ராசி படி நீங்கள் இந்த பொருட்களை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து கொள்ளலாம். இது தவிர சில பேருக்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் இருக்கும் அல்லவா. குறிப்பாக கடன் பிரச்சனை இருக்கிறது. வறுமை இருக்கிறது எனும் பட்சத்தில் நீங்கள் சிவபெருமானின் வலம்புரி சங்கில் பால் அபிஷேகம் செய்வார்கள் அதை பார்க்க வேண்டும். வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்யும்போது சிவபெருமானை மனதார, கண்குளிர தரிசனம் செய்தால் நீங்கள் குபேரர் ஆகலாம். உங்களுடைய கையால் சுத்தமான பசுஞ்சான விபூதியை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக வாங்கிக் கொடுக்கும் போது, வாழ்ந்து முடித்த பின்பு மோட்சமும் கிட்டும்.

சில பேர் தீராத நோய் நொடியால் அவதிப்படுவார்கள். தினமும் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ஆரோக்கியத்தில் மேம்பாடு ஏற்பட நோய் நொடி இல்லாத வாழ்க்கையை பெற கரும்புச் சாறு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வாங்கி தர வேண்டும். அப்படி இல்லை என்றால் எலுமிச்சம் பழம் வாங்கி கொடுக்கலாம். எலுமிச்சை பழச்சாறை கொண்டும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நோய் நொடி இல்லாத வாழ்க்கையை பெறலாம்.

சில பேர் நிம்மதி இல்லாத வாழ்க்கையை அனுபவித்து வருவார்கள். எல்லாம் இருக்கும். மன நிம்மதியும், சந்தோஷமும் மட்டும் இருக்காது. இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டுமா. உங்கள் கையால் அபிஷேகத்திற்கு, சிவபெருமானுக்கு இளநீர் வாங்கி கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை மகா சிவராத்திரி! நாளைய தினம் இந்த 3 பொருட்களில் ஏதாவது 1 பொருளை வாங்கினால் கூட உங்களுடைய கஷ்டங்கள் உடனே தீரும். வேண்டுதல் உடனே நடக்கும்.

இருப்பதிலேயே மிக உயர்ந்த செல்வம் குழந்தை செல்வம் தாங்க. அந்த பாக்கியத்திற்காக நிறைய பேர் தவம் இருக்கிறார்கள். நாளைய தினம் உங்கள் கையால் சுத்தமான சந்தனம் வாங்கி கொடுங்கள். சிவபெருமானுக்கு மனதார வேண்டிக் கொள்ளுங்கள். குழந்தை தேவை என்று. அடுத்த வருடத்திற்குள் உங்களுடைய வீட்டில் நிச்சயமாக ஒரு குழந்தை தவழும் என்பது நம்பிக்கை. மேல் சொன்ன வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம். அந்த சிவனின் அருள் ஆசியை பரிபூரணமாக பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -