இந்த தூபத்தை வீட்டில் போட்டால் லட்சுமி கடாச்சம் பரிபூரணமாக கிடைக்கும்

lakshmi thoobam
- Advertisement -

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டு கொண்டு இருக்கின்றோம். குடும்பத்தில் இருக்கும் நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓடோடி உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அஷ்டலட்சுமிகளின் அருள் நமக்கு தேவை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அஷ்ட லட்சுமிகளின் அருளை பெறுவதற்கு எந்த தூபத்தை வீட்டில் போட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் வெள்ளிக்கிழமை என்பது வழிபாட்டிற்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அதேசமயம் காலையிலும், மாலையிலும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு வீடே மங்களகரமாக இருக்கும். அப்படி நாம் தூபம் போடுவதால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் இன்னும் சில பொருட்களை நாம் சேர்ப்பதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

யார் ஒருவருக்கு அஷ்டலட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறதோ அவருக்குரிய வாழ்க்கை என்றுமே நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்கும். அப்படிப்பட்ட அஷ்டலட்சுமி வருகையை தரக்கூடிய தூபத்தை பற்றி பார்ப்போம். இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள்தான்.

முதலாவதாக நமக்கு தேவைப்படும் பொருள் வெள்ளை குங்கிலியம். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது. அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது துளசி இலை. இந்த துளசி இலையை சேகரித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். துளசி இலை கிடைக்காதவர்கள் பொடியாகவும் வாங்கி பயன்படுத்தலாம்.

- Advertisement -

மூன்றாவதாக நமக்கு தேவைப்படுவது மல்லிகைப்பூ. மல்லிகை பூவை உதிரியாக வாங்கி அதை நிழலில் உலர்த்தி நன்றாக காய வைத்து அதையும் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நான்காவதாக நமக்கு தேவைப்படுவது அருகம்புல் பொடி. இதற்கும் நாம் அருகம்புல்லை வாங்கி நிழலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். அருகம்புல் கிடைக்காதவர்கள் அருகம்புல் பொடியாக கூட வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக நமக்கு தேவைப்படுவது தான் வெட்டிவேர். இந்த வெட்டிவேரை வாங்கி வந்து நன்றாக காய வைத்து அதையும் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த ஐந்து பொருட்களையும் பொடி செய்து வைத்துக் கொண்டு சரிசமமான அளவு எடுத்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது 100 கிராம் என்றால் அனைத்திலும் 100 கிராம் எடுத்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது சாம்பிராணி தூபத்திற்குரிய பொடி தயாராகி விட்டது. வாரத்தில் ஒரு நாள் ஆவது அதாவது வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது மாலை காலையில் மாலையிலும் இந்த பொடியை பயன்படுத்தி நாம் வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். இதை நாம் தினமும் செய்யலாம் அதில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு தூபம் போடும் பொழுது அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் வரவேண்டும் என்று மனதார நினைத்து தூபம் போட வேண்டும். இப்படி செய்தால் கண்டிப்பான முறையில் அஷ்ட லட்சுமிகளும் நம் இல்லம் தேடி வந்து நம் இல்லத்திலேயே நிரந்தரமாக குடியிருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: யாராலும் வெல்ல முடியாத உயர் நிலையை அடைய வெள்ளிக்கிழமையில் வெற்றிலை தீபத்தை இந்த நேரத்தில் ஏற்றுங்கள்

எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஐந்து பொருட்களையும் முறையாக காய வைத்து பொடி செய்து சரிசமமாக கலந்து வீட்டில் தூபம் போட்டு அஷ்ட லட்சுமிகளின் அருளை நாமும் நம் வீட்டில் இருக்கும் அனைவரும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியான நிலையை அடைவோம்.

- Advertisement -