யாராலும் வெல்ல முடியாத உயர் நிலையை அடைய வெள்ளிக்கிழமையில் வெற்றிலை தீபத்தை இந்த நேரத்தில் ஏற்றுங்கள்

mahalakshmi dheepam
- Advertisement -

நாம் ஒவ்வொரும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் போராடுகிறோம். இந்த வெற்றி என்னும் இலக்கை அடைவது ஒன்றும் அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. இதற்கு நாம் எத்தனையோ போராட்டங்களையும் வலிகளையும் சந்தித்த பிறகு தான் இது நமக்கு கிடைக்கும்.

அப்படி போராடும் பட்சத்தில் வரும் தடைகளை எல்லாம் நம்முடைய உழைப்பு முயற்சியின் மூலம் தகர்த்தெறிந்தாலும் சில நேரங்களில் அதையும் மீறி நம்மால் அந்த இலக்கை அடைய சிரமப்பட வேண்டியதாக இருக்கும். அப்படியான நேரத்தில் நீங்கள் நினைத்ததை சீக்கிரத்தில் தடை இன்றி அடைய இந்த வெற்றிலை தீப பரிகாரத்தை செய்யலாம். அது எப்படி என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை தீபம்

வெற்றிலை தீபம் என்பது நமக்கு வெற்றியை தருவது மட்டுமின்றி லட்சுமி கடாட்சத்தையும் ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கக் கூடிய ஒன்று. இத்தகைய தீபத்தை நாம் வீட்டில் தொடர்ந்து ஏற்றி வரும் போது நம்முடைய எண்ணங்கள் யாவும் விரைவில் ஈடேறும்.

இந்த வெற்றிலை தீபத்தை வெள்ளிக்கிழமை அன்று ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை மதியம் 11. 45 லிருந்து 12 .15க்குள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றப்படும் இந்த தீபத்திற்கும் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்ற ஆறு வெற்றிலை வாங்க வேண்டும். இந்த வெற்றிலை கொஞ்சம் கூட கிளிச்சல், புள்ளிகள் இல்லாத தரமான வெற்றிலையாக இருக்க வேண்டும். அத்துடன் ஆறு அகல் விளக்கு, நல்லெண்ணெய், பஞ்சு திரி இவையெல்லாம் தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.

பூஜை அறையில் முதலில் ஒரு தீபத்தை ஏற்றி விட்டு ஆறு வெற்றிலையும் காம்பை தனியாக எடுத்து விடுங்கள். வெற்றிலை கிழியாமல் எடுக்க வேண்டும். அதன் பிறகு காம்பு இருக்கும் இடத்தில் கொஞ்சம் சந்தனத்தை வைத்து அதன் மேல் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஆறு வெற்றிலையின் நுனி கிழக்கு பார்த்தவாறு நேராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வெற்றிலையின் மேல் அகல் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த எண்ணெயில் நாம் ஏற்கனவே எடுத்து வைத்த வெற்றிலையின் காம்பை போட்டு விட வேண்டும். இப்போது இந்த தீபத்தின் முன் அமர்ந்து உங்களுடைய எண்ணம் எதுவோ அது நிறைவேறி விட்டதாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அதை நிறைவேற்றி தந்ததற்காக இந்த பிரபஞ்சத்திற்கும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த தீபம் ஏற்றுவதாக மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஆறு வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஏற்ற வேண்டும். இந்த தீபமானது வெற்றிலையில் ஏற்றும் போது மகாலட்சுமி தாயாரின் அருளையும் இதில் சேர்த்து இருக்கும் ஆறு எண் சுக்கிர யோகத்தையும் தரக் கூடியது.

இதையும் படிக்கலாமே: இக்கட்டான கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் நாளை இந்த மிளகு தீபத்தை ஏற்ற மறக்காதீங்க.

உங்களுடைய எண்ணங்கள் ஈடேற தாயாரின் அருள் கிடைக்கும். அது மட்டுமின்றி இந்த தீபத்தின் மூலம் நல்ல செல்வ நிலையை அடைந்து பேர் புகழோடு வாழ சுக்கிரனுடைய அருளும் சேர்ந்து கிடைக்க இந்த எளிமையான தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து உங்கள் இலட்சியத்தை அடையுங்கள்.

- Advertisement -