மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்து இருக்க இதை செய்தால் போதும்.

nilai vasal
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்காக பல பரிகாரங்களை செய்கிறோம். அதற்கு காரணம் மகாலட்சுமி அருள் நமக்கு கிடைத்தால் அனைத்து வித செல்வ செழிப்பும் கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பதற்காக மட்டுமே. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் நிலையாக நிலைத்து இருப்பதற்கும் செய்ய வேண்டிய பரிகாரத்தை தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுகிறோம். அவ்வாறு ஆசைப்படுவதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய பரிகாரங்களையும் செய்கிறோம். பல பரிகாரங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியான பலன் கிடைக்கும் என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் நாம் செய்யலாம். ஆனால் வாரத்திற்கு ஒருமுறை இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு நாட்கள் நாம் செய்கிறோமோ அவ்வளவு நாட்களும் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நம் வீட்டில் நிரந்தரமாக நிலைத்து இருக்கும்.

இதற்கு பயன்படுத்தாத சுத்தமான வெள்ளை துணி ஒன்று வேண்டும். இந்த துணியை பன்னீரில் நனைத்து காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 6 ஏலக்காய், 6 டைமண்ட் கற்கண்டு, விரலி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். பிறகு இந்த மூட்டையை நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.

- Advertisement -

இதில் தாமரைத் தண்டு மற்றும் ரோஜா இதழ்கள் ஆறு இவற்றையும் சேர்த்து வைக்கலாம். இவ்வாறு நாம் கட்டி விட்ட அந்த மூட்டையின் மேல் சிறிது மஞ்சளை மட்டும் வைத்து விட வேண்டும். அடுத்த வாரம் நாம் கட்டிய அந்த நாளைக்கு முந்தைய நாள் இந்த பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு மறுநாள் காலையில் மறுபடியும் இதே மாதிரி பொருட்களை வைத்து நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.

இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான பொருட்கள் என்பதால் நாம் இதை வாசலில் கட்டும் பொழுது மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்குள் வருவார்கள் என்றும் அப்படி வருபவர்கள் தங்களுடைய அருளாசியை நம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வழங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீராத கடன் தொல்லை தீர கைப்பிடி கொள்ளு போதும்.

இப்படி நம் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து மகாலட்சுமி தாயாரை எளிதில் நம் வீட்டிற்குள் வரவழைக்க முடியும் என்றும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்றும் முழுமையாக நம்புபவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -