மகாலட்சுமி தாயாரை நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்க வைக்க பச்சரிசி பரிகாரம்.

mahalakshmi arisi
- Advertisement -

எல்லோரும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். வீடு என்றென்றும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயம் தான். அதற்கான முதல் முயற்சியாக நல்ல முறையில் அயராது உழைத்து பாடு பட வேண்டும். இத்துடன் சேர்த்து வீட்டில் பூஜை முறைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் என தொடர்ந்து செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் செய்வதால் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக நம் வீட்டில் தங்கி செல்வ செழிப்பிற்கு குறைவில்லாமல் வாழ வைப்பார் என்று தான். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தரப்பட்டுள்ள எளிய தாந்த்ரீக பரிகாரத்தையும் செய்தால், தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்து அருள்வார் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயார் அருளை பெற

மகாலட்சுமி தாயார் வழிபாடு என்றாலே அது வெள்ளிக்கிழமை தான். இந்த நாளில் அவர்களை பூஜித்து வழிபடும் எல்லா வழிப்பாடும் பல மடங்கு பயன் கொடுக்கும். அது போல இந்த நாளில் செய்யப்படும் இந்த தாந்த்ரீக வழிபாடும் நம் இல்லம் மகிழ்ச்சிகரமாக வாழ பெரிதும் உதவி செய்யும்.

இந்த பரிகாரத்துக்கு சிகப்பு நிற துணி, மஞ்சள் நிற கயிறு, வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரம் செய்வதற்கு வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து பூஜை அறையில் முதலில் வழிபாடுகளை செய்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து நம் சமையல் அறையில் சமைக்க பயன்படுத்தும் அரிசியில் இருந்து ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சிறப்பு நிற துணி வைத்து மஞ்சள் நிற நூலால் கட்டி விடுங்கள். அதன் பிறகு இந்த மூட்டையை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து அகல் தீபம் ஒன்றை நெய் ஊற்றி ஏற்றி விடுங்கள்.

அதன் பிறகு இந்த மூட்டை பூஜை அறையில் இருக்க வேண்டும். அன்று மாலை 5 மணிக்கு மேல் ஏதேனும் ஒரு இனிப்பை நிறைவேத்தியமாக வைத்து விடுங்கள். அதன் பிறகு தீப தூப ஆராதனை செய்து வழிபட்ட பின் ஓம் மகாலட்சுமி தாயே நமஹ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி பூஜையை முடித்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது பூஜை அறையில் கட்டி வைத்த இந்த அரிசி முட்டையில் இருக்கும் அரிசி எடுத்து நீங்க சமையலுக்கு பயன்படும் அதே பானையில் கொட்டி விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம் இல்லத்தை விட்டு எப்போதும் செல்ல மாட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நம் குடும்பம் செல்வ நிலையில் பல மடங்கு உயரும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணத்தை இரண்டு மடங்கு அதிகமாக சேமிக்க தாந்திரீக பரிகாரம்.

இந்த தாந்த்ரீக வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்யுங்கள். இதனால் மகாலட்சுமி தாயாரை நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்க வைத்து வாழ்க்கையில் உயரலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -