வெள்ளிக்கிழமை அன்று இந்த பொருட்களை மகாலட்சுமி தாயாரை நினைத்து பூஜை அறையில் வைத்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகி மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

lakshmi samy room
- Advertisement -

வார நாட்களில் தெய்வீகத்திற்கு தொடர்பான நாளாக நாம் வெள்ளிக்கிழமையை கருதுகிறோம். வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதையும் தாண்டி நாம் சிறப்பாக பல பரிகாரங்களை செய்கிறோம். பணம் பெருக வேண்டும் என்பதற்காக மட்டும் செய்யாமல் ஐஸ்வர்யங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல பரிகாரங்களை மேற்கொள்கிறார்கள். அதிலும் சில பொருட்களை வெள்ளிக்கிழமை அன்று நம் பூஜை அறையில் நாம் வைத்து வழிப்பட்டோம் என்றால் மகாலட்சுமி தாயாரின் மனம் குளிரும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த பொருட்களை வைத்து வழிபட்டால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும் என்று தான் நாம் பார்க்கப் போகிறோம்.

சிலர் பணம் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள். மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்தால் பணம் மட்டும் நமக்கு கிடைக்கும் என்ற அர்த்தமில்லை. அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதே அதன் முழுமையான பொருள். அனைத்து செல்வங்கள் என்று பார்க்கும் பொழுது உடல் ஆரோக்கியம், பணம், நகை, நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், சொத்து சுகம் என்று அனைத்தும் கிடைக்கும்.

- Advertisement -

இந்த அனைத்து செல்வங்களையும் பெறுவதை தான் நாம் ஐஸ்வர்யம் என்று கூறுகிறோம். இந்த ஐஸ்வரியத்தை நாம் பெறுவதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக தேவைப்படும். அந்த அருளைப் பெற நாம் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களை வெள்ளிக்கிழமை அன்று வைத்து வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று காலை சுக்கிர ஹோரையில் பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அது முழுக்க கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் இவற்றில் ஏதாவது ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். வீட்டில் தங்க நாணயம் இருந்தால் அதையும் வைக்கலாம். அதனுடன் மல்லிகை பூவையும் சேர்த்து வைக்க வேண்டும்.

- Advertisement -

இவை மூன்றும் தெரியும் அளவிற்கு அதற்குப் பின்னால் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும். பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயார் ஒவ்வொருவருடைய இல்லத்திற்கும் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆதலால் தான் அன்றைய தினம் நாம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருந்தார்கள். அவ்வாறு மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு வரும் பொழுது வீட்டில் இப்படி நாம் செய்து வைத்திருந்தோம் என்றால் அவர்கள் மனம் மகிழ்ந்து அங்கேயே தங்கி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் அதிசயத்தை உங்களால் காண முடியும்.

இந்த எளிய பரிகாரத்தை செய்து மகாலட்சுமி தாயாரின் மனதை குளிர வைத்து சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியுடனும், நலமுடனும் வாழ்வோம்.

- Advertisement -