கண் திருஷ்டி நீங்கவும், பொன் பொருள் சேர்ந்து மகாலட்சுமியின் அருள்கடாச்சம் வீட்டில் நிலைத்திருக்கவும் இந்த ஒரு தீபத்தை முறையாக ஏற்றினாலே போதும். வாழ்வில் இருக்கும் பல சங்கடங்கள் வந்த வழியே போகும்.

oomaththam
- Advertisement -

அனைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருக்கக்கூடியது தான் கண் திருஷ்டி. ஒருவருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால், அவர் நினைத்த காரியத்தை அவரால் செய்ய இயலாது. அதையும் மீறி அவர் செய்தால் அந்த காரியத்தில் அவருக்கு வெற்றிகள் கிடைக்காது. அதே போல பலருக்கும் பணப்பிரச்சனை என்பது தீராத ஒன்றாக இருக்கிறது. இப்படியான சிக்கல்களில் இருந்து விடுபட நாம் ஏற்றக்கூடிய தீபம் தான் ஊமத்தங்காய் தீபம். இந்த ஊமத்தங்காய் தீபத்தை வெவ்வேறு வகையில் ஏற்றுவதன் மூலம் நாம் வெவ்வேறு பலன்களை பெறமுடியும். இந்த தீபத்தை முறையாக எப்படி ஏற்றுவது என்பதை இந்த ஆன்மீக குறிப்பில் பார்ப்போம் வாருங்கள்.

உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வங்களில் மிகவும் சிறப்புக்குரியவராக விளங்குபவர் சிவபெருமான். அவரை நினைத்து நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பொருள் என்று நினைத்தவுடன் நம் நினைவிற்கு வருவது வில்வமே. வில்வத்தை கொண்டு சிவபெருமானை நாம் அர்ச்சனை செய்தால் நமக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ, அதே அளவு பலனை ஊமத்தை இலையை வைத்து அர்ச்சனை செய்யும் பொழுதும் நமக்கு கிடைக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஊமத்தங்காயை வைத்து தான் நாம் இன்று தீபம் போடும் முறையை பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஊமத்தங்காய் தீபம் ஏற்றுவது எப்படி:
இந்த தீபத்தை நாம் சிவபெருமானை நினைத்து போடலாம். உக்ர தெய்வங்களை நினைத்தும் போடலாம். குலதெய்வத்தை நினைத்தும் போடலாம். சிவபெருமானை நினைத்து இந்த ஊமத்தங்காய் தீபத்தை போடும்பொழுது தீபம் ஏற்ற நாம் இலுப்பை எண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஊமத்தங்காய் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. அதை வாங்கி வந்து மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

விஷத்தன்மை நிறைந்த காயாகவும், அதே சமயம் முட்கள் நிறைந்த காயாகவும் இருப்பதால் கையில் ஏதாவது உரையை போட்டுக்கொண்டு அதன் காம்பை நீக்க வேண்டும். பிறகு அதனுள் இருக்கும் விதைகள் அனைத்தையும் எடுக்க வேண்டும். இப்பொழுது அதில் இலுப்பை எண்ணெயை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றலாம்.

- Advertisement -

இந்த ஊமத்தங்காய்க்கு கீழ் நாம் சாதாரண மண் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றும் பொழுது நமக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டிகளும், தடைகளும் நீங்குகிறது. பாலேடு என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கும் சங்கில் இந்த ஊமத்தங்காய் தீபத்தை வைத்து ஏற்றும் பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. பசுஞ்சானத்தின் மீது இந்த ஊமத்தங்காய் தீபத்தை வைத்து பசு நெய் ஊற்றி ஏற்றும் பொழுது மகாலட்சுமியின் கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கிறது.

இந்த ஊமத்தங்காய் தீபத்தை நாம் கோவில்களிலும் ஏற்றலாம், நம் இல்லங்களிலும் ஏற்றலாம். வாரத்தில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள் கூட உங்களை பார்த்ததும் ஓடி வந்து பணத்தை திருப்பி தந்து விடுவார்கள்.

இவ்வாறு ஏற்றுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகும். தீய சக்திகள் நம்மை அண்டாது. தீய சக்திகளால் ஏற்பட்டிருக்கும் தடைகள் அனைத்தும் தகர்ந்து விடும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சம் பெற்று சகல சௌபாக்கியமும் பெற்று நலமுடன் வாழ்வோம்.

- Advertisement -