இந்த பொருள் உங்கள் வரவேற்பறையில் இருந்தால் போதும், மஹாலஷ்மியே உங்கள் வீடு தேடி வந்து அமர்ந்து விடுவாள்.

mahalashmi
- Advertisement -

வீடு லட்சுமி கரமாக இருக்க பல வழிகள், பூஜைகள், இருக்கிறது என்றாலும் அதில் இந்த ஒரு முறையை சற்று வித்தியாசமானது. இந்த பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் நீங்கள் தேடி போகாமல் உங்களை தேடி செல்வம் வரும். வீட்டின் லட்சுமி கடாட்சத்திற்கு குறைவே இருக்காது என்ற ஒரு ஐதீகம் உள்ளது அது என்ன பொருள் என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

உங்கள் வீட்டை எப்பொழுதும் லட்சுமி கரமாக மாற்றும் அந்தப் பொருள் தென்னை மரத்தின் குருத்து. இந்த இந்த தென்னம் குறித்து பெரும்பாலும் தெய்வ வழிபாடுகளில் வைத்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஏனென்றால் இந்த தென்னங்குருத்துக்கு லட்சுமி கடாட்சத்தை ஈர்க்கும் தன்மை அதிகம். இது அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இன்றளவும் நிறைய இடங்களில் வீட்டில் நடக்கும் பல சுப நிகழ்வுகளில் தென்னங்குருத்து இடம் பெற்று இருக்கும்.

- Advertisement -

சரி நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித் தரும் இந்த தென்னம் குருத்து என்பது நீங்கள் நினைப்பது போல் சுலமபாக எந்த தென்னை மரத்திலிருந்து வேண்டுமாலும் கொண்டு வந்து வைத்து விடலாம் என்று நினைத்து விடக்கூடாது. ஒரு வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. இதற்கு நிச்சயமாக ஒற்றைத் தென்னை மரத்தின் குருத்து தான் தேவைப்படும்.

பொதுவாக தென்னை மரங்கள் வீட்டில் வைத்தாலும் கூட தனி மரமாக வைக்க மாட்டார்கள். இரட்டை மரம் தான் வைப்பார்கள். ஒற்றை தென்னை மரம் வைக்க கூடாது என்பது தான் அதற்கான காரணம். ஆனால் இந்த முறைக்கு ஒற்றை தெண்ணனை மாற குருத்து தான் தேவை.

- Advertisement -

அந்த மரத்தின் குருத்தை கொண்டு வந்து சுத்தமான நேரில் அலசி மஞ்சள் தண்ணீர் தெளித்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து எப்போதும் போல் தீப ஆராதனை பூஜை செய்து முடித்த பிறகு உங்கள் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு வரவேற்பறையில் அதை தலைகீழாக கட்டி தொங்க விட வேண்டியது தான். நீங்கள் வீட்டில் பூஜை செய்யும் பொது எல்லாம் இதற்கு சம்புராணி கட்டி வந்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருள் உங்கள் பர்சில் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. நிற்காமல் பண வரவு வந்து கொண்டு இருக்க இந்த பொருள் உங்களிடம் இருந்தால் போதும்.

இப்படி செய்வதின் மூலம் உங்கள் வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை இந்த தென்னம் குருத்தானது தேடி வர செய்யும். இந்த ஒற்றை தென்னை மரத்தின் குருத்தை தேடி எடுத்து அதன் மூலம் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -