மகாலட்சுமியின் அருள் கிடைக்க பரிகாரம்

mahalshmi
- Advertisement -

பொதுவாகவே மகாலட்சுமி அம்சம் நிறைந்த வீடு சந்தோஷமாகத்தான் இருக்கும். மகாலட்சுமி அம்சம் ஒரு வீட்டில் இல்லை என்றால், தொடர்ந்து அந்த வீட்டில் பல பிரச்சனைகள் வரத் தொடங்கிவிடும். எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருப்பது பணம்.

அந்த ஒரு பிரச்சனையை சரி செய்ய நான் தொடங்கி விட்டால், அடுத்தடுத்து வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தெம்பு நமக்கு கிடைத்துவிடும். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காணும், இந்த மகாலட்சுமி அம்சத்தை பெற ஏதேனும் சுலபமான ஒரு வழி உண்டா என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு.

- Advertisement -

மகாலட்சுமியின் அருள் கிடைக்க பரிகாரம்

வியாழக்கிழமையை இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யனும். வியாழக்கிழமை இரவு தூங்க செல்வதற்கும் முன்பு ஒரு பிங்க் நிற பேனாவை எடுத்துக்கோங்க. உங்களுடைய வலது கையில் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். கையில் இருக்கும் எழுத்து ஓரளவுக்கு, மறுநாள் காலையில் தெரியும்படி கொஞ்சம் இரண்டு மூன்று முறை அந்த பேனாவை வைத்து அழுத்தம் கொடுத்து எழுதினால், தூங்கி எழுந்தாலும் கையில் இருக்கும் எழுத்தானது களைந்து போகாது அல்லவா.

அதுபோல கையில் ஸ்ரீம் என்ற வார்த்தையை எழுதி, வியாழக்கிழமை தூங்க செல்லவும். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை எழுந்தவுடன் கண்விழிக்கும் போது உங்களுடைய உள்ளங்கையை பாருங்க. ஸ்ரீம் என்ற வார்த்தையை எழுதிய உள்ளங்கையை வெள்ளிக்கிழமை காலை பார்க்கும்போது உங்களுக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து இரண்டு உள்ளங்கைகளையும் பார்க்கணும்.

- Advertisement -

முதலில் உங்களுடைய வலது காலை பூமாதேவியின் மேல் வைப்பதற்கு முன்பு பூமாதேவியை தொட்டு வணங்கிக்கோங்க. பிறகு உங்கள் காலடியை கிழக்கு பக்கம் பார்த்தவாறு இரண்டு மூன்று அடி எடுத்து வைத்துவிட்டு, அதன் பின்பு நீங்கள் வழக்கம் போல உங்களுடைய காலை வேலைகளை தொடங்கலாம். சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு முன்பாகவே விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வீட்டிற்குள் வர வைக்க வேண்டும்.

மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் என்று ஐந்து நிமிடம் பூஜை அறைக்கு முன்பாக அமர்ந்து மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் கிடைத்தே ஆக வேண்டும் என்று உறுதியோடு சாமி கும்பிடுங்க.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட

இவ்வாறு மகாலட்சுமியை வேண்டி விரும்பி அழைப்பவர்கள் வீட்டில், நிச்சயம் பணக்கஷ்டம் நிற்காது. மகாலட்சுமியின் அம்சம் நிறைவாக கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள். 3 அல்லது 4 வாரங்களில் நீங்கள் நம்ப முடியாத ஒரு நல்ல மாற்றம் தெரியும் என்ற நம்பிக்கையோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -