வீட்டில் இந்த கற்பூரத்தை ஏற்றினால் மகாலட்சுமி தாய் எந்த சூழ்நிலையிலும் உங்கள் வீட்டில் இருந்து வெளியேறவே மாட்டாள். ஏழேழு ஜென்மத்துக்கும், பணக்கஷ்டம் வராமல் இருக்க இந்த ஒரு கற்பூரம் போதும்.

mahalakshmi
- Advertisement -

அந்த மகாலட்சுமியின் அனுகிரகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் பெற முடியாது. புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே இந்த கலியுகத்தில் கஷ்டம் இல்லாமல் வாழ முடிகிறது. சில பேருக்கு கர்ம வினையின் பயனால், வீட்டில் பலவிதமான கஷ்டங்கள். அதில் முதல் கஷ்டமாக இருப்பது பண கஷ்டம், கடன் சுமை. பணம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால், மகாலட்சுமி தாயை நினைத்து நம்முடைய வீட்டில் எப்படி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சிறப்பு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாலட்சுமியை வசியம் செய்ய ஏற்றக்கூடிய ஒரு கற்பூரம்
அந்த கற்பூரத்தை முறையாக எப்படி ஏற்றுவது என்பதை நேரடியாக வழிபாட்டை பார்த்து விடலாம். இந்த வழிபாட்டு முறைக்கு நமக்கு வில்வ காயின் ஓடு தேவை. வில்வ மரம் சிவன் கோவிலில் இருக்கும். அந்த மரத்திலிருந்து கோவில் குருக்களின் அனுமதியோடு ஒரு காயை எடுத்து வரலாம். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் காசு கொடுத்து ஒரு காயை வாங்கி வில்வ காயை இரண்டாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் பழத்தை எடுத்து விட்டு வெறும் ஓட்டை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பாதி அளவு ஓடு 2 கொட்டாங்குச்சி போல நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

அதில் ஒரு பாதி ஓட்டை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வில்வ காய் ஓட்டிற்கு உள்ளே கொஞ்சமாக மஞ்சள், கொஞ்சமாக குங்குமம், இலவங்கம் 2, பட்டை 2, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் சிறிய துண்டு, வாசனை நிறைந்த பன்னீர் ரோஜா இதழ்களை போட்டு, இதன் உள்ளே ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும். ஏற்றிய இந்த கற்பூரத்தை அப்படியே பூஜையறையில் வைக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் அந்த ஓடு கீழே சாயாமல் நிற்பது போல தயார் செய்து வைத்துக் கொண்டு மேல் சொன்னபடி கற்பூரத்தை ஏற்றி வையுங்கள்.

வழக்கம்போல ஒரு பூஜை செய்யும் போது பூஜை அறையில் எப்படி அலங்காரம் செய்வீர்களோ அப்படி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். மற்ற விலங்குகளையும் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக தயார் செய்த இந்த வில்வ ஓட்டில்  வைத்திருக்கும் சூடத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த அக்னி பகவானுக்கு முன்பு அமர்ந்து உங்களுடைய கோரிக்கையை மகாலட்சுமி தாயிடம் வைக்க வேண்டும். மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எவ்வளவு பெரிய பண கஷ்டமாக இருந்தாலும் அதை சரி செய்ய இந்த ஒரு சின்ன வழிபாடு உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும். இந்த கற்பூரத்தை எந்த நேரத்தில், எந்த கிழமையில் ஏற்றுவது. இந்த கற்பூரத்தை வாரம்தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று காலை 6 மணி அல்லது மாலை 6 மணி இந்த இரண்டு நேரத்தில் எப்போது வேண்டுமென்றாலும் ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க உங்க பீரோவுக்கு அடியில் இந்த பொருளை ஒளித்து வைத்து விடுங்கள். யாருக்கும் தெரியாமல் செய்யக் கூடிய ரகசிய பரிகாரம்.

கற்பூரம் எரியும் வரை நிச்சயமாக உங்களுடைய பிரார்த்தனை முழு மனதோடு இருக்க வேண்டும். மனதை அலைபாயவிடாமல் ஐந்து நிமிடம் முழு நம்பிக்கையோடு வேண்டுதல் வையுங்கள். பூஜை முடிந்த அடுத்த நாள் வில்வ ஓட்டுக்கு உள்ளே இருக்கும் சாம்பலை கால்படாத இடத்தில் கொட்டி விட்டு, அதே வில்வ ஓட்டினை அடுத்த வாரம் தீபம் ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி உங்களுடைய பண கஷ்டம் தீரும் வரை 5 வாரம், 11 வாரம் என்று உங்கள் விருப்பம் போல கணக்கு வைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -