பணவரவு அதிகரிக்க உங்க பீரோவுக்கு அடியில் இந்த பொருளை ஒளித்து வைத்து விடுங்கள். யாருக்கும் தெரியாமல் செய்யக் கூடிய ரகசிய பரிகாரம்.

- Advertisement -

பணம் என்று சொன்னால் பிணம் கூட வாயை பிளக்கும் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. இந்த பணமானது அத்தனை சக்தி வாய்ந்த ஒன்று. பணம் வேண்டாம், பணம் இல்லை என்றால் வாழ முடியாதா என்றெல்லாம் பேசினாலும் கூட இதையெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்கு தான். பணம் கட்டாயம் தேவை அந்த பணத்தை சம்பாதிக்க தான் அனைவரும் இந்த பாடுபட வேண்டியது இருக்கிறது. சிலருக்கு பணம் கைகளில் நிற்காமல் செலவாகிக் கொண்டே இருக்கும் பணமே கைக்கு வராது. இந்த பரிகாரத்தை செய்யும் போது பணம் நம்மிடம் தடையில்லாமல் வந்து சேரும் வாய்ப்பை ஏற்படுத்தும். அந்த எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணப்புழக்கம் தாராளமாக இருக்க பணம் நம்மிடம் வந்து சேர நம்மிடம் பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்க வேண்டும். அப்போது தான் பணமானது நம்மை தேடி வரும் வந்த பணம் கையில் தாங்கும், சுப செலவுகள் நடக்கும். இப்படி எல்லாவற்றிற்கும் காரணம் பணத்தை ஈர்க்கும் சக்தி நம்மிடம் இருக்க வேண்டும். அந்த ஒரு நேர்மறையான சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்ட பரிகாரம். இந்த இரண்டு பொருட்களையும் தனித்தனியாக வைத்து நிறைய பரிகாரங்கள் உண்டு. இப்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு எளிய பரிகாரத்தை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய நமக்கு தேவையானவை இரண்டு. ஒன்று கல் உப்பு இன்னொன்று படிகாரம் இதை வைப்பதற்கு கண்ணாடிக் குடுவை அல்லது மண் பானை. கண்ணாடி, மண் இவை இரண்டுமே மண்ணால் ஆன பொருள் இதில் வைக்கும் போது இந்த பொருளின் ஆற்றலை அதிகரிக்கும். பொன், வெள்ளி, பித்தளை, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. சரி இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

பண வரவு அதிகரிக்க ரகசிய பரிகாரம்
இந்த பரிகாரத்தை செவ்வாய், வியாழன், வெள்ளி மூன்று நாட்களில் இந்த செய்யலாம். ஒரு கண்ணாடி குடுவை நிறைய உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவில் ஒரு சிறிய படிகாரம் துண்டு சொருகி வைத்து விடுங்கள். இந்த பரிகாரம் யார் செய்கிறார்களோ அவர்களை தவிர மற்றவர் யாருக்கும் இந்த பொருளை அங்கு வைத்திருப்பது தெரியக் கூடாது. இவை இரண்டையும் ஒன்றாக வைத்து உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பீரோவுக்கு அடியில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை முதலில் தொடங்கும் நாள் வெள்ளி, வியாழன், செவ்வாய் போன்ற நாட்களில் தொடங்கிக் கொள்ளுங்கள். இதை மாற்றுவது அமாவாசை அன்று தான் மாற்ற வேண்டும். ஒவ்வொரு அமாவாசயிலும் இதை மாற்றும் போது இந்த உப்பை எடுத்து தண்ணீரில் நன்றாக கரைத்து செடிகளில் ஊற்றி விடுங்கள். படிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் மாதம் மாற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: திங்கட்கிழமை இதை மட்டும் செய்தால் தீராத நோய்கள் தீரும். எவ்வளவு பெரிய கொடிய நோயும், சொல்லாமல் கொள்ளாமல் உடம்பை விட்டு செல்லும்.

இந்த பரிகாரம் செய்யத் தொடங்கிய உடனே உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் கையில் எப்போதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும். நல்ல ஆற்றல் உங்களுக்குள் தோன்றுவதை நீங்களே உணர முடியும். ஆனால் இதை பீரோவின் அடியில் வைக்கும் போது இதன் மீது மற்றவர் பார் பார்வையில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்து பணவரவை அதிகபடுத்தி நல்ல செல்வ செழிப்புள்ள வாழ்வை வாழுங்கள்.

- Advertisement -