மகாலட்சுமியை ஒரே இடத்தில் பிடித்து அமர வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இன்று மகாலட்சுமி தேவி ஒரு இடத்தில் இருந்தால், நாளை அவள் வேறு ஒருவர் கைகளுக்கு சென்று விடுவாள். அதுதாங்க பணம். அது நிலையாக ஒரு இடத்தில் தங்குமா? நிச்சயம் தங்காது.
ஆனால் மகாலட்சுமியை நம்மிடம் நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள மகாலட்சுமியின் நாமத்தை சொல்வதை விட, மகாலட்சுமிக்கு பிடித்த நாமத்தைச் சொன்னால், அவள் நிச்சயம் நம்மை விட்டு போகவே மாட்டாள். மகாலட்சுமியை பற்றி இதுவரை யாரும் கேள்வி படாத ஒரு விஷயத்தை தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
மகாலட்சுமிக்கு 18 பிள்ளைகள். 18 மகன்கள் இருப்பதாக சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. வடமாநிலத்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். வட மாநிலத்தவர்கள் செல்வ செழிப்பு உயர, செய்யக்கூடிய பூஜையில், சொல்ல கூடிய மந்திரத்தில் இதுவும் ஒன்று
ஒரு தாய்க்கு மகிழ்ச்சியானது எப்போது கிடைக்கும். தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி அடுத்தவர்கள் பெருமையாக பேசும் போது, ஒரு தாய்க்கும் மன நிறைவு என்பது அதிகமாக இருக்கும். அதே போலத்தான் மகாலட்சுமியின் புதல்வர்களான 18 பேருடைய நாமத்தை நாம் சொல்லும்போது, மகாலட்சுமியின் மனதுக்குளிரும். அந்த சமயத்தில் தேவையான வரங்களை அவளிடம் இருந்து நாமும் பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கு அந்த மகாலட்சுமியின் 18 புதல்வர்களின் பெயரை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா. அதற்காகத்தான் இந்த பதிவு. தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த 18 நாமங்களை ஒரு முறை படித்தால் போதும். உங்கள் பணம் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களும் தீர்ந்துவிடும். கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். மகாலட்சுமியின் மகன்கள் பெயர்களை படித்து உங்கள் பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட ஆர்வமாக இருக்கிறீர்களா. இதோ 18 வரி மந்திரத்துடன் லட்சுமியின் மகன்களின் பெயர்கள்.
மகாலட்சுமி மகன்களின் 18 பெயர்கள்
ஓம் தேவசகாய நம
ஓம் சிக்லிதாய நம
ஓம் ஆனந்தாய நம
ஓம் கர்த்மாய நம
ஓம் ஸ்ரீப்ரதாய நம
ஓம் ஜாத்வேதாய நம
ஓம் அனுராகாய நம
ஓம் சம்வாதாய நம
ஓம் விஜயாய நம
ஓம் வல்லபாய நம
ஓம் மதாய நம
ஓம் ஹர்ஷாய நம
ஓம் பாலாய நம
ஓம் தேஜஸே நம
ஓம் தம்காய நம
ஓம் சலிலாய நம
ஓம் குல்குலாய நம
ஓம் குருந்தகாய நம
தினமும் இந்த 18 பெயர்களையும் ஒரு முறை காலையில் எழுந்தவுடன் பூஜை அறையில் அமர்ந்து சொல்வது நல்லது. முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது இந்த நாமங்களை சொல்லுங்கள். மகாலட்சுமியின் அருளாசி உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: நரசிம்மர் ஜெயந்தி 2024
ஒருவேளை ஜாதகத்தில் உங்களுக்கு பணக்கஷ்டம் வரக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த நாமங்களுக்கு உண்டு. பணப்பிரச்சனை சொத்து பிரச்சனை எல்லாம் தீரும். கடன் சுமை குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.