வெறுமையாக இருக்கும் உங்கள் வாழ்க்கையை கூட வெல்லம் போல தினம் தினம் இனிப்பாக மாற்றலாம். தினம்தோறும் ஒரு துண்டு வெல்லத்தை இப்படி செய்தால்.

vellam
- Advertisement -

மனிதர்களுக்கு தினம்தினம் வாழ்க்கையானது போராட்டத்தில்தான் சென்று கொண்டிருக்கின்றது. மறந்தும்கூட இனிமையான சம்பவங்கள் நடப்பது மிக மிக அரிதாகி விட்டது. கலியுகத்தின் கட்டாயமுமோ என்னமோ தெரியவில்லை. சந்தோஷம் இந்த உலகத்தை விட்டு, மனிதர்களை விட்டு தள்ளித் தள்ளி தூரமாக சென்று கொண்டு இருக்கிறது. வெறுமையாக இருக்கக்கூடிய உங்கள் வாழ்க்கையைக் கூட தினம்தினம் சந்தோஷமாக மாற்ற தித்திக்கும் இந்த பரிகாரம் நிச்சயமாக உங்களுக்கு கைமேல் பலனை கொடுக்கும். தினம் தினம் கஷ்டத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மனதில் கூட சந்தோஷம் பிறக்க ஒரே ஒரு வரி மந்திரமும், ஒரு துண்டு வெல்லமும்.

தினமும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்ய வேண்டிய வழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது வீட்டில் எந்த துன்பமும் நெருங்காது. இப்படியாக தீபம் ஏற்றி பூஜை அறையில் வழிபாடு செய்யும்போது ஒரு சிறிய தட்டில், ஒரே ஒரு சிறிய துண்டு வெல்லம் வைத்து விட வேண்டும். வெல்லத்தை பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு வைத்தால் கூட போதும்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின்பு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின்பு மகாலட்சுமியையும் அஷ்டலக்ஷ்மி களையும் மனதில் நினைத்துக்கொண்டு ‘சந்தோஷம் வசிவசி’ என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லிவிட்டு நமஸ்காரம் செய்து இறுதியாக உங்கள் பூஜையை நிறைவு செய்து கொண்டு, பிரசாதமாக வைத்த இந்த வெள்ளத்தை உங்கள் நிலை வாசல்படிக்கு வெளியே உள்ள இடத்தில் போட்டு விடுங்கள். அந்த வெள்ளத்திற்கு நிச்சயமாக எறும்புகள் மொய்க்கும்.

அந்த எறும்புகள் வெல்லத்தை தினம்தோறும் வந்து சாப்பிட தொடங்கும். இப்படி செய்து வர உங்களுடைய வாழ்க்கையில் தினம் தினம் சந்தோஷம் பொங்கி வழியும். வெல்லத்திற்கு பதிலாக வேறு எந்த இனிப்பான பொருட்களையும் வைக்க வேண்டாம். அதாவது நாட்டு சர்க்கரை, டைமண்ட் கற்கண்டு, வெள்ளை சர்க்கரை என்று வேறு எந்த இனிப்பையும் வைக்காதீர்கள். மண்டை வெல்லம் கடையில் கிடைக்கும் அல்லவா, அதை வாங்கி இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

தினமும் இத்தனை நாள் தான் என்ற கணக்கெல்லாம் கிடையாது. இந்த பரிகாரத்தை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். உங்களுடைய வாசல்படியில் போட்ட வெல்லத்தை எறும்புகள் சாப்பிட சாப்பிட உங்களுடைய முன் ஜென்ம பாவங்கள் குறையும். ஜாதக கட்டத்தில் கஷ்டம் கொடுக்கக் கூடிய கிரகங்களின் தாக்கம் குறையும். வீட்டில் சுப காரிய தடைகள் இருந்தால் அந்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எல்லாம் சரியாகிவிடும். சந்தோஷம் உங்கள் வசமாகும்.

நம்பிக்கை மட்டும் தான் தேவை. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து பாருங்கள். நிச்சயமாக மன வேதனை தரக் கூடிய சம்பவங்கள் எல்லாம் சரியாகி தினம் தினம் உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம் புதியதாக பிறந்து கொண்டே இருக்கும். இந்த கலியுகத்தில் கஷ்டம் இல்லாமல் வாழ இது ஒரு சுலபமான பரிகாரம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -