வீட்டில் மகாலட்சுமி தீபம் ஏற்றுவது எப்படி

mahalashmi
- Advertisement -

காலமெல்லாம் கஷ்டமில்லாமல் வாழ வேண்டுமென்றால் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ மகாலட்சுமி தாயை வேண்டினால் போதாது. தினம் தினம் மகாலட்சுமியை வேண்டி விரும்பி இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் உங்களுக்கு தினமும் அவள் அருளாசியை வழங்கிக் கொண்டே இருப்பாள். வீட்டில் பணமழை பொழிய, வறுமை நீங்க பஞ்சம் தங்காமல் இருக்க, ஏற்ற வேண்டிய மகாலட்சுமி விளக்கை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

வறுமை நீக்கும் மகாலட்சுமி விளக்கு

ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நம்முடைய வழக்கம். அதில் என்ன புதுசாக மகாலட்சுமியை நினைத்து ஏற்ற வேண்டிய, மகாலட்சுமி விளக்கு இருக்கு, என்ற சந்தேகம் நிச்சயம் உங்களுக்கு இருக்கும். இது கொஞ்சம் சக்தி வாய்ந்த விளக்கு.

- Advertisement -

இந்த விளக்கை எந்த வீட்டில் தினம் தினமும் மாலை 6 மணிக்கு ஏற்றி வைத்து மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கிறீர்களோ, அந்த வீட்டில் தினம் தினம் மகாலட்சுமி வந்து செல்வ மழையை பொழியச் செய்வாள். இதுதான் நம்பிக்கை. அந்த விளக்கை வீட்டில் எப்படி ஏற்றுவது? இந்த விளக்கை நிலை வாசலுக்கு உள்பக்கம், வீட்டிற்குள் ஏற்ற வேண்டும்.

நிலை வாசலுக்கு உள்ள இடம் இருக்கும் அல்லவா, நிலை வாசலுக்கு பக்கத்திலேயே ஒட்டியபடி அந்த இடத்தில் அரிசி மாவில் சின்னதாக ஒரு கோலம் போட வேண்டும். ஸ்வஸ்திக் கோலம் போட்டால் சிறப்பு. அதன் மேலே ஒரு வெற்றிலையை வைத்து, ஒரு மண் அகல் வைத்து, அந்த விளக்குக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து, நெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றி வைக்கவும்.

- Advertisement -

மகாலட்சுமியே எங்கள் வீட்டிற்குள் வருக, வீட்டில் செல்வ வளத்தை பெருக வைக்க அருளாசி தேவை என்ற வார்த்தைகளை சொல்லி மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்று பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை நினைத்து வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைவாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தினமும் வீட்டுப் பெண்களின் கையால் இந்த விளக்கை ஏற்றங்கள். மாதவிடாய் நாட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் திரியை கடையிலிருந்து வாங்க கூடாது. வெள்ளை நிறத்தில் இருக்கும் மஞ்சள் திரியை மஞ்சள் தூளில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து நிழலிலேயே உலர வைத்து திரியை நீங்களே தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க வழிபாடு.

தினமும் அந்த வெற்றிலையை மாற்ற வேண்டும். பழைய வெற்றிலையை எடுத்துப் போட்டுவிட்டு, புது வெற்றிலை வைக்கவும். தினமும் அதே மண் அகல்விளக்கில் நெய் ஊற்றி ஏற்றலாம் தவறு கிடையாது. இதுதான் மகாலட்சுமிக்கு பிடித்த தீபம். உங்களுக்கு பணம் காசு விஷயத்தில் வெற்றியை தரக்கூடிய தீபமாகவும் சொல்லப்பட்டுள்ளது. எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -