தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க வழிபாடு.

hanuman valipadu
- Advertisement -

நம் வாழ்க்கையில் பல பொருட்கள் நமக்கு கிடைத்திருக்கும். அதில் சில நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அப்படி முக்கியமாக இருக்கக்கூடிய பொருட்கள் தொலைந்து விட்டால் அதை திரும்பப் பெற வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்பட்டு நாம் பலவாறு தேடியபோதும் அது நமக்கு கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் நாம் அடுத்ததாக இறைவனிடம் முறையிடுவோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஆஞ்சநேயரிடம் எப்படி வேண்டுதல் வைத்தால் நாம் தொலைந்த பொருட்கள் நமக்கு திரும்ப கிடைக்கும் என்று நான் பார்க்கப் போகிறோம்.

ஆஞ்சநேயரை பல விஷயங்களுக்காக வழிபடுவது உண்டு. அவ்வாறு நாம் வழிபடும்போது ஆஞ்சநேயரின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைத்து நாம் வேண்டி அனைத்தையும் ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார் என்பது பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒன்றே, அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை தொலைந்து போன பொருட்களை திரும்ப பெறுவதற்கு வழிபட வேண்டிய முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று செய்யலாம். அல்லது மூல நட்சத்திரம் இருக்கும் நாட்களில் செய்யலாம். இரண்டும் சேர்ந்து வரும் நாட்களில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும். ஒரு மட்டை தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அதோடு வெள்ளை நிற துணியை வாங்கி அதை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தடவி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது அந்த மஞ்சள் துணியில் மட்டை தேங்காயை வைத்து அதனுடன் இரண்டு நாணயங்களை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். அவ்வாறு கட்டும் பொழுது நமக்கு எந்த பொருள் காணாமல் போனதோ அந்த பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என்று ஆஞ்சநேயரிடம் மனதார வேண்டிக் கொண்டு கட்ட வேண்டும். கட்டிய இந்த மூட்டையை வீட்டின் கன்னி மூலை அல்லது ஈசானிய மூலையில் கட்ட வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு கட்ட இயலாது என்று நினைப்பவர்கள் வீட்டு பூஜை அறையில் ஆஞ்சநேயரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்து விடலாம். ஆஞ்சநேயரின் புகைப்படம் இல்லாதவர்கள் பூஜை அறையில் ஒரு இடத்தில் வைத்தால் கூட போதும். பிறகு தொடர்ந்து 48 நாட்கள் இந்த மூட்டைக்கு தூப தீப ஆராதனை காட்ட வேண்டும்.

இவ்வாறு நாம் வழிபாடு செய்யும் பொழுது தொலைந்து போன நம்முடைய பொருட்கள் திரும்பக் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இந்த மூட்டையை அவிழ்த்து அதில் இருக்கும் தேங்காயை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை மூன்று முறை தேங்காயுடன் வலம் வர வேண்டும். பிறகு மட்டை தேங்காயின் நாரை உரித்து விட்டு தேங்காவை உடைத்து ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியம் செய்யலாம் அல்லது சிதர் தேங்காய் போல் உடைக்கவும் செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் பொருள் காணாமல் போனதற்கு மட்டும் செய்ய வேண்டும் என்பது இல்லாமல் வரவே வராது என்று நினைத்து இருக்கும் பணத்தைக் கூட திரும்ப வர வைப்பதற்கு இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வண்டி வாகன விபத்தை தடுக்க பரிகாரம்

மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இந்த மட்டை தேங்காய் பரிகாரத்தை மனதார ஆஞ்சநேயரை வழிபட்டு செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் காணாமல் போன பொருளை திரும்ப கொண்டு வந்து சேர்ப்பார் என்பது உறுதி.

- Advertisement -