ஜனவரி முதல் நாள், முதலில் சொல்ல வேண்டிய வார்த்தை

mahalshmi13
- Advertisement -

நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. நாம் எல்லாம் தமிழர்கள். நமக்கு தமிழ் புத்தாண்டு தான். தமிழ் வருடப்பிறப்பு என்ற கணக்கு இருந்தாலும், நாளைய தினம் சந்தோஷமாக இந்த ஆங்கில புத்தாண்டை கொண்டாட கூடிய வழக்கமும் நம்மிடம் இருக்கிறது. ஆகவே எல்லோரும் நேர்மறை ஆற்றலோடு சந்தோஷமாக இருக்கக்கூடிய தருணத்தில், இந்த பூமியில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.

அந்த நேரத்தில் வைக்கக்கூடிய வேண்டுதல் நமக்கு உடனே பலிக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அது இந்த ஆங்கில புத்தாண்டு என்று மட்டும் கிடையாது. எந்த ஒரு விசேஷ நாட்களாக இருந்தாலும் மக்கள் மனதில், சந்தோஷமும் வாழ்த்தும் வெளிப்படும். அந்த சந்தோஷ நேரத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

இதன் அடிப்படையில் நாளைய தினம் ஆங்கில புத்தாண்டில் சந்தோஷமான தருணத்தில், கண் விழித்ததும் நீங்கள் சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஒரு வரி மந்திரத்தை நாளை காலை எழுந்தவுடன் முதல் வார்த்தையாக நீங்கள் சொன்னால் தினம் தினம் உங்களுக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

தினம் தினம் பணவரவு அதிகரிக்கும். இந்த வருடம் முழுவதும் பண கஷ்டம் இல்லாமல் வாழ்வீர்கள். நாளை கண்விழித்ததும் நீங்கள் சொல்ல வேண்டிய அந்த மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாளைய தினம் கூடுமானவரை அதிகாலை வேலையிலேயே கண் விழிக்க பாருங்கள். கண்விழித்ததும் பல் தேய்க்கனும் முகம் கழுவனும் என்ற அவசியம் கூட கிடையாது.

- Advertisement -

உங்களுக்கு பிடித்த பொருளை முதலில் பார்த்தாலும் சரி, அல்லது பணம் காசுகள் முதலில் கண்விழித்தாலும் சரி, பிறகு இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையை பார்த்து ‘ஓம் ஸ்ரீம்’ என்ற வார்த்தையை சொல்லிவிட்டு, ‘இந்த வருடம் முழுவதும் எனக்கு செல்வ செழிப்பு உயர்ந்து கொண்டே இருக்கப் போகிறது. தினம் தினம் பணவரவு இருக்கும். வருமானம் பல மடங்கு பெருகும்’ என்றவாறு சொல்லி, இந்த நாளை தொடங்குங்கள். ‘ஓம் ஸ்ரீம்’ என்பது மகாலட்சுமியின் பீஜ மந்திரம் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலும் சரி அல்லது 27 முறை உச்சரித்தாலும் சரி, அது உங்களுடைய சௌகரியம்.

இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

கண் விழித்தவுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த வார்த்தையை சொல்லலாம். நாளை இந்த மந்திரத்தை முதல் வார்த்தையாக சொல்லுபவர்களுக்கு மகாலட்சுமி அருள் கடாட்சம் அடுத்த வருடம் முழுவதும் கிடைக்கும். மறக்காதிங்க நாளைய தினம் இந்த எளிமையான ஆன்மீகம் குறிப்பு நீங்கள் பின்பற்றினால் அடுத்த வருடம் முழுவதும் பணம் கஷ்டம் இல்லாமல் வாழலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -