நாளை மகா சிவராத்திரி! நாளைய தினம் இந்த 3 பொருட்களில் ஏதாவது 1 பொருளை வாங்கினால் கூட உங்களுடைய கஷ்டங்கள் உடனே தீரும். வேண்டுதல் உடனே நடக்கும்.

sivan-vilakku
- Advertisement -

வருடம் முழுவதும் சிவனை வழிபாடு செய்ய முடியாதவர்கள் கூட, நாளைய தினம் மகா சிவராத்திரி அன்று சிவன் வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட பலனை பெற்றுவிடலாம். அதிலும் குறிப்பாக நாளை சனி பிரதோஷத்தோடு சேர்ந்து வரக்கூடிய மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரியை முடிந்தவரை யாரும் தவற விடாதீர்கள்.

வாய்ப்பு உள்ளவர்கள், வாய்ப்பு இல்லாதவர்கள் என்று எந்த ஒரு காரணத்தையும் சொல்லாமல் இருந்த இடத்திலிருந்து சிவபெருமானை ஒரு நொடிப்பொழுதாவது மனதார நினைத்து வழிபாடு செய்தவருக்கும், அருள் ஆசியை அந்த எம்பெருமான் வழங்கி விடுவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருந்தாலும் வழிபாட்டு முறையில் சில சிறப்புகள் என்று இருக்கும் அல்லவா. அந்த வரிசையில் நாளைய தினம் மகா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய மூன்று பொருட்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மகா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள்:
சிவராத்திரி என்றாலே சிவனுக்கு உரியது. சிவனுக்கு உரியது என்றால் வில்வ இலை தான். முதலில் எல்லோரும் நாளை வில்வ இலையை வாங்கி உங்கள் கையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய கொடுத்து விடுங்கள். இது முதல் விஷயம். இது பொதுவாக எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம். இதை மறக்காதீங்க. இதை தவிர்த்து மூன்று பொருட்கள் உள்ளது. அது என்னென்ன என்பதை இப்போது பார்த்துவிடுவோம். கருங்காலி மாலை, ருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை, இந்த மூன்று மாலைகளுமே இறை அம்சம் பொருந்தியது.

ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலியால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும். நாளை கருங்காலியால் செய்யப்பட்ட மாலை, கருங்காலியால் செய்யப்பட்ட பிரம்பு, அல்லது உங்களுக்கு வேறு எந்த பொருள் கிடைத்தாலும், ஒரு கருங்காலி பொருளை வாங்கி வீட்டில் வைப்பது மிக மிக சிறப்பு. கருங்காலியால் செய்யப்பட்ட பொருள் வீட்டில் இருந்தால், கண் திருஷ்டி நெருங்காது. கெட்ட சக்தியால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. வீட்டில் நேர்மறை ஆற்றலும், இறை சக்தியும் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

அடுத்ததாக சொல்லப்பட்டுள்ள பொருள் ருத்ராட்சம். ருத்ராட்சத்தோடு சேர்த்து திருநீரும் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லா பெரிய சிவன் ஆலயங்களிலும் ருத்ராட்சம் கிடைக்கும். நீங்கள் ருத்ராட்சம் அணியாதவராக இருந்தால், நாளைய தினம் ருத்ராட்சம் வாங்கி அணிந்து கொண்டால் உங்களுக்கு சிவனின் அருளும் ஆசீர்வாதமும் முழுமையாக பெற்று விட்டதாகவே அர்த்தம். தினமும் நெற்றியில் நீரு அணியும் பழக்கம் உங்களுக்கு இல்லையா. நாளை முதல் தொடங்கி விடுங்கள். சிவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக பெற்ற மனிதராக நீங்களும் மாறிவிடுவீர்கள்.

அடுத்ததாக சொல்லப்படுவது ஸ்படிக மாலை. மனதை அமைதி படுத்தவும் உடலை குளிர்ச்சி ஆக்கவும், இந்த ஸ்படிகம் மாலை ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் ஸ்படிக மாலை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் எந்த மந்திர ஜபத்தை உச்சரித்தாலும் அந்த மந்திரம் உடனே சித்தியாகும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும். அந்த சிவபெருமானின் அருளை முழுமையாக பெற்று விடலாம்.

மேலே சொல்லப்பட்டுள்ள எல்லா பொருட்களும் பெரும்பாலும் எல்லா சிவன் ஆலயங்களிலும் கிடைக்கும். அங்கேயே சென்று வாங்குவது மிக மிக சிறப்பு. வெளியில் வாங்கினால் அந்த பொருட்கள் ஒரிஜினலா அல்லது போலியா என்பதை பரிசோதித்து வாங்கிக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பொருட்களை போலியாக போடுவதன் மூலம் நமக்கு பெரியதாக பலன் கிடைக்காது. ஆகவே உஷாராக இந்த பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும். அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏமாந்து விடாதீர்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றி அந்த எம்பெருமானின் அருள் ஆசியை பெற வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -