இந்த பிரதோஷ நாளில் விநாயகர் ஈஸ்வரர் இருவருக்கும் எளிமையான இந்த மலரால் அர்ச்சனை செய்தாலே போதும். நீங்கள் செல்வ செழிப்புடன் சீரும் சிறப்புமாக மாட மாளிகையில் வாழ்வது உறுதி.

sivan vinayagar
- Advertisement -

தெய்வங்களிலே முதன்மை யானவராக வணங்கப்படுவது விநாயகரும் ஈஸ்வரரும் தான். இந்த இரண்டு தெய்வங்களையும் நாம் தினந்தோறும் நினைத்து வணங்கினாலே நம்முடைய வாழ்வில் எந்த துன்பமும் நேராது. அப்படியான இவர்களை நினைத்து இந்த ஒரு மலரால் அர்ச்சனை செய்யும் போது நம்மை எந்த துன்பமும் நெருங்காமல் நல்ல முறையில் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மலர் என்பதை இந்த ஆன்மீகம் குறித்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்வந்தராய் வாழ தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டிய மலர்:
கடவுள்களிலே மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்யக்கூடியவர்கள் விநாயகரும் ஈஸ்வரம் தான். இந்த இருவருக்கும் வைக்கும் மலரை கூட நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. விநாயகரை பொறுத்த வரையில் மஞ்சள் சாணம் போன்றவற்றில் பிடித்து வைத்து ஒரே ஒரு அருகம்புல்லை வைத்தால் கூட போதும் அதற்கே அவர் அத்தனை அருள்களை நமக்கு புரிவர்.

- Advertisement -

அதே போல தான் ஈஸ்வரரும் அவரை மனதால் நினைத்து வெறும் வில்வ இலைகளை மட்டும் வைத்து வணங்கினாலே போதும். அவருடைய முழு அருளையும் நாம் பெற்று விடலாம். இப்படியான இந்த இரண்டு தெய்வங்களையும் வணங்க பொதுவான மலர்கள்இரண்டு உண்டு. அது வெள்ளெருக்கு பூ, ஊமத்தம் பூ இந்த இரண்டும் தான்.

இதில் ஊமத்தம் பூவை விநாயகருக்கும் ஈஸ்வரருக்கும் தினமும் வைத்து வணங்கும் போது அல்லது இந்த பூக்களினால் அர்ச்சனை செய்யும் போது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி நம்முடைய வாழ்வில் அனைத்து செல்வ நலன்களையும் பெற்று உயர முடியும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த மலர் அர்ச்சனையை நாம் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் பொழுது மிக மிக சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. 48 நாட்கள் செய்ய முடியாதவர்கள் 16 திங்கட்கிழமை அல்லது 16 பிரதோஷம் வேளையில் இந்த மலரால் அர்ச்சனை செய்யும் போது நம்முடைய துன்பம் எல்லாம் தூரம் போகும்.

இது போல மிகவும் எளிமையான முறையில் இந்த அர்ச்சனையை இவர்களுக்கு செய்தாலே போதும். நம்முடைய வாழ்வில் உள்ள துன்பம், வறுமை, பிணி, பீடை அனைத்துமே நீங்கி நம் வாழ்க்கை நல்ல ஒரு செல்வ நிலையை நோக்கி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேட்டவருக்கு அருளை வாரி வழங்கும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் இந்த மலரால் அர்ச்சனை செய்தால் நாம் கேட்காமலே நம்முடைய துன்பங்களை நீக்கி வாழ வைப்பார்கள்.

- Advertisement -