பெண்கள் கையில் எப்போதும் காசு தாராளமாக புழங்க இதை யாருக்கும் தெரியாமல் செய்து விடுங்கள். பண வரவிற்கு பெண்கள் செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம்.

mahalakzhmi cash
- Advertisement -

உலகில் ஆண் பெண் இருவரும் சமம் என்று என்ன தான் பேசிக் கொண்டாலும் இன்றளவும் சில விஷயங்களில் பெண்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் சற்றும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குடும்பத்தை பொறுத்த வரையில் ஆண் எவ்வளவு பாடுபட்டாலும் கூட அந்த குடும்பத்தின் பெண்கள் சரியாக வழி நடத்த வில்லை என்றால் குடும்பம் தழைப்பது சற்று கடினம் தான். ஆகையால் தான் பெண்களுக்கு இல்லத்தரசி என்ற பெருமையும் உண்டு. ஒரு குடும்பத்தை கட்டி காக்கும் மாபெரும் பெருமை பெண்களையே சாரும்.

ஒரு வீட்டில் பெண்கள் கையில் காசு கொடுத்து வாங்கி செலவு செய்யும் பொழுது நிச்சயமாக அது பல மடங்கு பெருகும். பண வரவு என்றாலே அது மகாலட்சுமி தாயாரை தான் குறிக்கும். அதே போல வீட்டில் பெண்களையும் மகாலட்சுமி போல என்று புகழ்வார்கள். பண வரவிற்கான அந்த மகாலட்சுமி தாயார் சொரூபமாக வீட்டில் இருக்கும் பெண்களையும் பாவிப்பதால் தான் இப்படி சொல்கிறார்கள். ஆகையால் இந்த பரிகாரத்தையும் பெண்கள் தான் செய்ய வேண்டும். அதுவும் யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும் இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பெண்கள் கையில் காசு புழங்க பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு நாள் கிழமை என எதுவும் கிடையாது. நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அது பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும் இதை செய்யும் போது யாரும் பார்க்கக் கூடாது இது மட்டும்தான் இந்த பரிகாரத்தில் முக்கியமாக நாம் கடைப்பிடிக்க வேண்டியது. இந்த பரிகாரத்திற்கு தேவையானதை நாம் முன் கூட்டியே தயார் செய்து வைக்க வேண்டும். இதற்கு வாழை இலை சருகு வேண்டும். அதாவது தலை வாழ இலையை காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது கடைகளில் கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் பச்சையாக உள்ள வாழை இலையை எடுத்து வந்து நாமே வீட்டில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பரிகாரம் செய்யும் நாள் என்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து தலை ஸ்தானம் செய்த பிறகு, பூஜை அறையில் இந்த ஒரு பரிகாரம் முடிச்சு தயார் செய்ய வேண்டும். அதற்கு நாம் காய வைத்து எடுத்த வாழை இலையில் ஒன்பது ஒரு ரூபாய் நாணயம், ஒன்பது கிராம்பு, ஒன்பது ஏலக்காய் இவைகளை வைத்து சுருட்டிய பிறகு இதை ஒரு வெள்ளை நிற துணியில் வைத்து முடிச்சாக கட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து வீட்டில் பண வரவு தாராளமாக இருக்க வேண்டும் பணம் வரவிற்கான வழிகளை எங்களுக்கு காட்டுங்கள் என்று மனதார வேண்டிக் கொண்ட பிறகு, பீரோவில் அதிகம் பயன்படுத்தாத ஏதாவது ஒரு புடவையில் இடையில் வைத்து விடுங்கள். ஏன்னெனில் இது யாரும் பார்க்க கூடாது நீங்களே கூட இல்லை என்றால் சமையலறையில் கடுகு டப்பாவில் போட்டு எங்காவது ஒரு ஓரத்தில் எடுத்து வைத்து விடுங்கள்.

இவ்வளவு தான் பரிகாரம் இந்த முடிச்சை ஒரு முறை கட்டி வைத்து விட்டால் போதும். அது அப்படியே இருக்கலாம். அடிக்கடி மாற்ற வேண்டி அவசியம் கிடையாது. ஆனால் இதை கட்டி வைத்த பிறகு பணவரவானது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது இந்த பரிகாரத்தை பெண்கள் மாத விலக்கான நேரத்தில் செய்யக் கூடாது. அதே போல் இந்த பரிகாரத்தை செய்யும் போது உதவிக்காகவும் யாரையும் வைக்க கூடாது. நீங்கள் செய்வது உங்களுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: லட்சக்கணக்கில் கடன் இருந்தாலும் 3 மாதத்தில் அதையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடலாம். பசு மாட்டிற்கு தொடர்ந்து இந்த 1 பொருளை மட்டும் உங்கள் கையால் தானம் கொடுத்தால்.

பணவரவை தாராளமாக்க கூடிய இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -