உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் குறைந்து மன நிம்மதி கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் இந்த அற்புத முடிச்சை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள்

marudhani
- Advertisement -

ஒரு சில இல்லங்களில் வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டிற்கு வருவதற்கு அதிக அளவு யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்று வீட்டிற்கு சென்றவுடன் என்ன பிரச்சனை உருவாகப் போகிறது, என்ன சண்டை நடக்கப்போகிறதோ, மனைவியுடன் எப்படி பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ? என்ற மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவர்களுக்கு எந்த வழியும் தெரிவதில்லை. அது போலதான் வீட்டிலுள்ள மனைவியும் கணவர் வந்தவுடன் அவரிடம் எதைப்பற்றி பேச வேண்டும், எதைப் பற்றி பேசக்கூடாது, ஏதாவது பேசினால் என்ன சண்டை உருவாகும் என்ற மன உளைச்சலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

இவ்வாறு குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் கணவன் மனைவி இருவருக்குள்ளேயும் இது போன்ற மன உளைச்சல் இருந்து வந்தால் அந்த குடும்பத்தின் நிலைமை தலைகீழாக மாறிவிடும். இது போன்ற மன குழப்பத்தில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை எப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நன்றாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டியும் கூட காரணமாக அமையலாம். உங்கள் குடும்பம் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று சொல்லிவிட்டால் போதும் அந்த ஒரு வார்த்தையே அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குழைப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இவ்வாறு மற்றவர்களின் கண் பார்வை நமது குடும்பத்தை சுற்றி எதிர்மறை சக்தியை ஏற்படுத்தி விடுவதால், இரவு படுக்கும்பொழுது கூட நிம்மதியான தூக்கம் வருவதில்லை. ஏதாவது பலவித சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த மருதாணி இலை பரிகாரத்தைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கிறது.

- Advertisement -

வெள்ளை நிறத் துணியில் சிறிதளவு மருதாணி இலை, சிறிதளவு மருதாணி விதை மற்றும் அவற்றுடன் சிறிய கரித்துண்டு சேர்த்து முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். இந்த முடிச்சை இரவு படுக்கும்போதும் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல உறக்கம் வரும், மனதில் நிம்மதி பிறக்கும்.

பின்னர் இது போன்ற முடிச்சுகளை வீட்டின் மற்ற பகுதிகளில் ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாமல் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறை சக்திகள் அழிந்து விடும். கண் திருஷ்டிகள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடும்.

இதுபோன்ற மருதாணி முடிச்சை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வைத்து, அதே இடங்களில் வைத்து விட வேண்டும். இதனை மட்டும் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் வந்து கொண்டிருக்கும் சண்டைகள் மற்றும் மன உளைச்சல்கள் அனைத்தும் தீர்ந்து சுமூகமான வாழ்க்கை கிடைத்துவிடும்.

- Advertisement -