மன பயம் நீக்கும் பைரவர் வழிபாடு

bairavar2
- Advertisement -

தேவையில்லாத மன பயத்தை போக்கக்கூடிய சக்தி காலபைரவர் வழிபாட்டிற்கு உண்டு. பேய் பிசாசு ஆவி ஏவல் பில்லி சூனியம் எதுவுமே இருக்காது, ஆனால் எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு மனதை போட்டு குழப்பிக் கொண்டு, ராத்திரியில் நிம்மதியாக தூங்காமல், அன்றாட வேலையை சரிவர செய்யாமல், பித்து பிடித்தது போல சில பேர் சுத்தி வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை தெளிய வைக்கவும், இந்த பைரவர் வழிபாட்டை செய்யலாம். உங்களுடைய வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, மனபயம் உண்டான நேரத்தில், இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களைச் சுற்றி வரும் போது, பைரவரை நினைத்து உங்க வீட்ல தொடர்ந்து 48 நாள் இந்த விளக்கை ஏற்றி வையுங்கள். எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் எல்லாம் உங்களை விட்டு நீங்கி விடும்.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல் நீங்க பைரவர் வழிபாடு

ஒரு சின்ன தட்டில் மண் அகல் வைத்து, அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் 6 முழு மிளகுகளை போட்டு, சிவப்பு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ‘பைரவா நீயே எங்க வீட்டுல காவல் தெய்வமா வந்து இருக்கணும்’ என்று பைரவரை அழைத்து இந்த விளக்கை ஏற்றி வைக்கணும். அவ்வளவுதான். இதை பூஜை அறையில் தான் ஏற்றனும் என்ற அவசியம் கூட கிடையாது.

சில பேர் இலுப்ப எண்ணெய் ஊற்றி பூஜை அறையில் விளக்கு ஏற்ற மாட்டார்கள். அதனால் உங்களுடைய வீட்டிலேயே வரவேற்பறையில் ஒரு நாற்காலியின் மீது இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, விளக்குக்கு முன்பாக அமர்ந்து பைரவரை பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும். தினமும் தொடர்ந்து நாட்களை கணக்கு வைத்துக் கொள்ளாமல் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யுங்கள்.

- Advertisement -

இதோடு சேர்த்து ஒரு ஞாயிற்றுக்கிழமை பைரவர் கோவிலுக்கு போங்க. ஒரு பூசணிக்காயை வாங்கி இரண்டாக வெட்டி, உள்ளே இருக்கும் அந்த விதைகளை எல்லாம் முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, சுத்தமான நல்லெண்ணெய் எடுத்து அந்த இரண்டு பாதி பூசணிக்காயிலும் ஊற்றுங்கள். 1/2 லிட்டர் எண்ணெய்யாவது கட்டாயம் பிடிக்கும் பாதி பூசணிக்காயில்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கி இரண்டு பாதி பூசணிக்காய்களிலும் ஊற்றி, ஒரு நீல நிற துணியில் 108 மிளகு போட்டு முடிச்சாக கட்டி அதை அந்த எண்ணெயில் போட்டு விளக்கு ஏற்றி வையுங்கள். அன்றோடு உங்களுடைய கஷ்டங்கள் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிவிடும். காலபைரவர் உங்கள் குடும்பத்திற்கு காவல் காக்கும் தெய்வமாக, துணையாக வந்து நிற்பார்.

- Advertisement -

விடவே விடாதீங்க. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கால பைரவர் கோவிலுக்கு சென்று மாலை நேரத்தில் விளக்கு போடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பூசணிக்காய் விளக்கு போட்டால் போதும். அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளோ அல்லது அஷ்டமி திதிகளிலோ கோவிலுக்கு போகும்போது சாதாரண விளக்கை ஏற்றி வைரவரை வழிபாடு செய்வதை உங்கள் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் ஐஸ்வர்யம் நிரந்தரமாக தங்க தசமி திதியில் செய்ய வேண்டிய பூஜை

தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வருபவர்கள். உங்கள் பக்கத்தில் எந்த கெட்டதும் நெருங்காது. மன பயம் போயிரும். தேவையில்லாத பயம் நீங்கி நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -