வீட்டில் ஐஸ்வர்யம் நிரந்தரமாக தங்க தசமி திதியில் செய்ய வேண்டிய பூஜை

mahalashmi7
- Advertisement -

மகாலட்சுமி ஒரு இடத்தில் நிலையாக நிலைத்து தங்க மாட்டாள். இன்று ஒரு வீட்டில் மகாலட்சுமி தங்கி இருந்தால், அந்த மகாலட்சுமி நாளை இன்னொரு வீட்டுக்கு செல்வாள்? பணம் இன்று வரும், நாளை வேறொரு கைக்கு செல்லும், ஆனால் நம்முடைய வீட்டில் இந்த லட்சுமி கடாட்சமானது நிறைவாக நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைத்து, இந்த பூஜையை மட்டும் செய்துவிட்டால் போதும்.

உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் அப்படியே நிலையாக நின்றுவிடும். ஐஸ்வர்யத்தை கொடுத்த மகாலட்சுமி, அதை திரும்பவும் எடுத்துச் செல்லவே மாட்டாள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பூஜையை என்று செய்யணும், எப்படி செய்யணும், ஆன்மீகம் சார்ந்த அரிய தகவல் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

ஐஸ்வர்ய கடாட்சம் நிலைத்து நிற்க பூஜை

இந்த பூஜையை கட்டாயம் தசமி திதி அன்று தான் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த பூஜைக்கு உண்டான பவர் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். மாதத்தில் ஒரு நாள் தசமி திதி வரும். அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல பூஜை அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வீடெல்லாம் சுத்தம் பத்தமாக இருக்க வேண்டும்.

பூஜையறையில் 9 தாம்பூல தட்டுகள் தேவை. 9 தாம்பூல தட்டிலும் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். 1/4 கிலோ பச்சரிசியை கொட்டி அந்த தாம்பூல தட்டில் முழுமையாக பரப்பி வைத்து விட்டு, அதற்கு மேலே 1 மட்டை தேங்காய், 2 வளையல், வெற்றிலை, பாக்கு, வாழைபழம் தாம்பூலம், பூ, மருதாணி, சீப்பு இப்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய மங்களப் பொருட்கள் உங்களால் என்ன வைக்க முடியுமோ அதை வைத்து அப்படியே பூஜை செய்ய வேண்டும். இந்த பொருட்களில் மிக மிக அவசியமான பொருள் ‘மட்டை தேங்காய்’.

- Advertisement -

மட்டை தேங்காயோடு வெறும் தாம்பூலம் வைத்துக் கூட நீங்கள் கொடுக்கலாம். ஆனால் மட்டை தேங்க இல்லாமல் பூஜையை செய்தால் பூஜைக்கு உண்டான பலன் முழுமையாக கிடைக்காது. தீபம் தூபம் கற்பூர ஆராதனை காண்பித்து உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்கவும்.

இந்த பூஜைக்கு உங்களுடைய வீட்டுக்கு 9 திருமணம் ஆன பெண்களை அழைக்க வேண்டும். வீட்டிற்கு வந்த பெண்களுக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து பாத பூஜை செய்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பூஜைக்கு கட்டாயம் ஏதாவது ஒரு பிரசாதம் வைக்கணும். சர்க்கரை பொங்கல், கேசரி இதுபோல ஏதாவது ஒரு பிரசாதம் செஞ்சு வச்சுக்கோங்க. சின்ன சின்ன தொண்ணையில் வைத்து அந்த ஒன்பது தட்டிலும் அந்த பிரசாதத்தை வைக்கணும்.

- Advertisement -

பூஜையை மனநிறைவோடு முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு இந்த தாம்பூல தட்டோடு, மட்டை தேங்காயோடு அதன் மேலே இருக்கும் பொருட்களை அப்படியே தானம் கொடுத்து விட வேண்டும். அவ்வளவுதான், இந்த பூஜையை மனநிறைவோடு செய்யுங்கள். உங்க வீட்டில் அஷ்ட ஐஸ்வரியமும் தாண்டவம் ஆட வேண்டும். தீர்க்க சுமங்கலி வரம் வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 48 நாட்களில் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த வழிபாட்டை மனநிறையோடு செய்து இந்த 9 பெண்களுக்கு இந்த தானத்தை செய்து விட்டால் போதும் மகாலட்சுமி தேவி உங்கள் வீடு தேடி வந்து உங்க வீட்டில், எப்போதுமே செல்வம் நிலையாக இருக்கவும், ஆரோக்கியம் நிலையாக இருக்கவும், ஐஸ்வரியம் நிலையாக இருக்கவும் ஆசீர்வாதத்தை வழங்கி விட்டு செல்வார்கள் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கும் அஷ்ட ஐஸ்வரியமும், மகாலட்சுமி ஆசிர்வாதமும் தேவை என்றால் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -