இந்த இலையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், மன பயம் நீங்கும். டென்ஷன் குறையும். பதட்டமே இருக்காது.

sleep1
- Advertisement -

சில பேரை எல்லாம் பார்க்கும் போது எப்போதும் ஒரு மன பயத்தோடே இருப்பார்கள். எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு பதட்டம். ஒரு படபடப்பு. டென்ஷனை தலை மேல் வைத்துக் கொண்டே இருப்பார்கள் பாதம் தரை மேல் நிற்காது பாருங்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உடல்நிலை சீக்கிரம் சுகம் இல்லாமல் போய்விடும். எவ்வளவு பெரிய டென்ஷன் இருந்தாலும் அதை ரிலாக்ஸ் ஆகத்தான் கையாள வேண்டுமே தவிர, எப்போதும் படபடப்போடு நம்மை நாம் வைத்துக் கொள்ளக் கூடாது.

சில பேருக்கு எதைத் தொட்டாலும் பயம் இருக்கும். பயந்து பயந்து வாழ்நாளில் பாதி நல்லதை அவர்கள் இழந்திருப்பார்கள். பயத்தால் சொல்ல வந்த வார்த்தையை கூட முழுசாக சொல்ல மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்வார்கள். சில பேருக்கு எதிரி பயம் அதிகமாக இருக்கும். இப்படி உங்களுக்கு எந்த பயம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை பின்பற்றி கொள்ளுங்கள்.

- Advertisement -

முதல் குறிப்பு:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் மூலிகை இலை அம்மான் பச்சரிசி இலை. இந்த இலை சுலபமாக கிராமப்புறங்களில் கிடைக்கும். இதை பறிக்கும் போது லேசாக பால் வரும். அதை கழுவி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் இலை மட்டும் நமக்கு போதும்.

அந்த இலைகளை சிறிய மஞ்சள் துணியில் வைத்து மடித்தோ அல்லது முடிச்சாக கட்டியோ உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். 6 வாரம் சனிக்கிழமை இப்படி இந்த இலையை தலையில் வைத்து தூங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தவுடன் அந்த முடிச்சை அப்படியே கொண்டு போய் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒவ்வொரு வாரமும் புதியதாக தான் இந்த அம்மான் பச்சரிசி இலையை பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். இப்படி செய்து வர உங்களுடைய படபடப்பு குறையும் மன பயம் நீங்கும். பதட்டம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வீர்கள். ஆறு வாரத்தில் வித்தியாசத்தை உணருவிங்க.

- Advertisement -

இரண்டாவது குறிப்பு:
இதுவும் ஒரு மூலிகை செடிதான். நாயுருவி வேர் என்று சொல்லுவார்கள். இதில் செந்நாயுருவி இருக்கிறது. உங்களுக்கு இந்த இரண்டு செடிகளில் எது கிடைத்தாலும் பரவாயில்லை. அந்தச் செடியை காம்புகளோடு பறித்து வந்து அப்படியே நன்றாக காய வைத்து, நிழலிலேயே காய வைத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை வாரம் ஒரு முறை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு குளித்து வர மன பயம் நீங்கும். குறிப்பாக சில பெண்களுக்கு அதிக அளவில் பயம் இருக்கும். தைரியம் அவர்களுக்குள் ஒரு துளி கூட இருக்காது. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பார்கள். கோழைத்தனமாக இருக்கக்கூடிய பெண்கள் இந்த நாயுருவி பொடியை போட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் குளியல் மேற்கொள்ளும் போது, அவர்களுக்குள் ஒரு மன உறுதியும் மன தைரியமும் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. (ஆண்களும் இந்த பொடியை போட்டு குளிக்கலாம் தவறு கிடையாது).

இதையும் படிக்கலாமே: இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமை, இந்த நாளை தவற விடாமல் பெருமாள், மகாலட்சுமி தாயார் இருவரின் அருளோடு சேர்த்து பொருளையும் பெற, இந்த ஏலக்காய் மாலை வழிபாட்டை செய்து விடுங்கள்.

முயற்சி செய்து பாருங்கள் எல்லா விஷயத்திற்கும் பயந்து முடங்கி கிடப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது. பயத்தை நீக்கி வாழ்க்கையில் முன்னேற இது நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள சுலபமான வழிகள். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -