மனக்குழப்பங்கள் தீர பரிகாரம்

ragu kethu bayam curd
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் அவர் மேலும் மேலும் உயர வேண்டும் என்றால் நிச்சயம் அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவாக இருக்க வேண்டும். இந்த முடிவை எடுத்தாலும் திடமாகவும் அதில் உறுதியாகவும் எடுக்க வேண்டும். இத்தகைய மனநிலை இல்லாத ஒருவரால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி அடையவே முடியாது.

இந்த மனநிலையை கூட நம்முடைய கிரக நிலையின் மாற்றம் தான் என்று சொல்லப்படுகிறது. நாமே ஒரு சிலரை பார்த்திருப்போம் எப்போதும் பதட்டமாகவே இருப்பார்கள். எந்த முடிவையும் தெளிவாக எடுக்காமல் பிறர் சொல்வதைக் கேட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள்.

- Advertisement -

அவர்களால் வாழ்க்கையில் அடுத்த கட்ட நிலைக்கு செல்லவே முடியாது. இப்படியானவர்கள் முதலில் தங்களுடைய மனக்குழப்பத்தையும் மன பயத்தையும் போக்க வேண்டும். அதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மன பயம் மனக்குழப்பம் நீங்க

இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய இரண்டு பொருட்கள் மட்டும் தான் தேவை. அது சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த தயிரும் ராகு கேதுவின் ஆதிக்கம் நிறைந்த சீரகம் தான் இதை வைத்து இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 48 நாட்களும் வீட்டில் தயிரை உரை ஊற்றி அதில் சீரகத்தை போட்டு சிறிது நேரம் ஊற விட்டு அதன் பிறகு இதை சாப்பிட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஆன்மீக பலன் என்று பார்த்தால் ஒருவருடைய மனநிலை இப்படி அமைய செவ்வாயின் ஆதிக்கம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இது போன்ற சூழ்நிலையில் அவர்களால் எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. அதற்கு சந்திர பகவான் ராகு கேதுவின் ஆதிக்கம் நிறைந்த இந்த பொருட்களைக் கொண்டு அதை நிவர்த்தி செய்யலாம். என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் இந்த உணவில் உண்ணும் போது அவர்களுடைய ரத்தம் சுத்தமடைந்து மனம் தெளிவடைந்து சிந்தனைகள் சிறப்புடன் செயல்படும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு பரிகாரமும் நம் வாழ்வியலில் தொடர்புடைய ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையிலான ஒரு பரிகாரம் தான் இதுவும்.

இதையும் படிக்கலாமே: சொர்ண தோஷம் நீங்க பௌர்ணமி வழிபாடு

பரிகாரம் எந்த முறையில் இருப்பினும் இதன் மூலம் நம்முடைய சிந்தனை தெளிவடைந்து மன பயமோ மன குழப்பமோ இன்றி இருந்தாலே வாழ்க்கையில வெற்றி படியை எளிதில் தொட்டு விடலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -