சொர்ண தோஷம் நீங்க பௌர்ணமி வழிபாடு

lady pournami manthiram
- Advertisement -

தங்கம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். அது வெறும் அணிகலனாக மட்டும் இருந்தால் அதன் மீது இத்தனை ஈர்ப்பு ஆர்வமும் இருக்காது. இன்றைய காலக்கட்டத்தில் தங்கத்தை பொறுத்த வரையில் அந்தஸ்தை காட்டக் கூடிய ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாதவர்களுக்கு இதன் நிச்சயமாக புரியும். தங்கம் எத்தனை மதிப்புடையது என்று.

இன்னும் சிலரும் நல்ல நிலையில் இருப்பார்கள் பணம் காசிற்கு குறைவிருக்காது. ஆனால் தங்கம் அவர்களிடம் சேரவே சேராது. அப்படியே வாங்கினாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக அடமானம் சென்று விடும். இவையெல்லாம் சொர்ண தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் தான் இந்த தோஷம் நீங்க செய்யக் கூடிய எளிய பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சொர்ண தோஷம் நீங்க பரிகாரம்

சொர்ண தோஷம் ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஆனால் இந்த தோஷம் உள்ளவர்களால் தங்க நகைகளை அவ்வளவு எளிதில் வாங்கி விட முடியாது. அப்படியே வாங்கினாலும் அவர்களால் அதை அணிந்து கொள்ள முடியாது. அப்படியானவர்கள் பௌர்ணமி நாளில் செய்யும் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்யலாம்.

இந்த வழிபாடு செய்வதற்கென்று நீங்கள் தனியாக எந்த வித பூஜையும் விரதமும் இருக்க தேவை இல்லை. பெளர்ணமி மாலை 6:00 மணி அளவில் வீட்டில் பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அது நெய் தீபம் நல்லெண்ணெய் தீபம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியத்தை வீட்டில் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த சர்க்கரைப் பொங்கலை ஒரு தட்டில் வாழை இலை வைத்து அதில் சர்க்கரை பொங்கல் வைத்துக் கொள்ளுங்கள் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொண்டு நிலவொளி படும் இடத்திற்கு சென்று விடுங்கள். அங்கு சந்திர பகவானுக்கு இந்த நெய்வேத்தியத்தை பிரசாதமாக படைக்க வேண்டும். அதன் பிறகு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

சொர்ணம் வசி வசி

என்ற இந்த மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு நீங்கள் படைத்த சர்க்கரை பொங்கலையும் தண்ணீரையும் பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு வீட்டில் உள்ளவர்கள் பிரசாதமாக சாப்பிடுங்கள். அந்த தண்ணீரையும் வீணாக்காமல் குடித்து விடுங்கள்.இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று செய்யும் பொழுது சொர்ண தோஷம் நீங்கி தங்க நகை சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதே போல் வெள்ளிக்கிழமைகளிலும் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம். இரண்டுமே நல்ல பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே: துன்பங்களை தூள் தூளாக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

நம்மால் தங்கம் வாங்க முடியவில்லை நாளை பௌர்ணமி நிலவைப் பார்த்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் சொர்ண தோஷம் நீங்கி தங்கம் சேரும் யோகம் தேடி வரும். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறலாம்.

- Advertisement -