மன பயம் கொண்டவர்கள், தினமும் இந்த ஒரு செயலை செய்து வந்தால் தைரியசாலிகளாக மாறலாம்.

narasimar
- Advertisement -

ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாது பெரிய வியாதி மன பயம். பயம் உள்ளவர்களால் எதையுமே சரியாக செய்ய முடியாது. பயந்து பயந்து, தங்களுடைய வாழ்க்கையின் பாதி நாளை பிரயோஜனம் இல்லாமல் கழிப்பார்கள். எதற்கும் துணிந்தவன், எல்லா விஷயத்தையும் ஒரு கை பார்த்து விடுவான். ஆனால், மன பயம் உள்ளவனோ யோசித்து யோசித்து, சிந்தித்து சிந்தித்து, குழம்பி குழம்பி, அப்படியே வாழ்க்கையில் தேங்கி நிற்பான். இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர எப்போதும் துணிச்சலாக இருக்க, துணிச்சலான முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் சாதிக்க, இந்த ஒரு ஆன்மீகம் சொல்லும் விஷயத்தை நீங்கள் பின்பற்றினாலே போதும்.

மனபயம் நீங்க துணிச்சலைப் பெற செய்ய வேண்டிய வழிபாடு:
வராகி அன்னை, பிரத்யங்கிரா தேவி, நரசிம்மர், அங்காள பரமேஸ்வரி இப்படிப்பட்ட தெய்வங்களை நீங்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு தினமும் சென்று இவர்களுடைய திரு உருவத்தை பார்த்து, தைரியத்தை வாழவைத்துக் கொள்ள வேண்டும். இவர்களைப் பார்த்த உடனேயே நமக்கு மன பயம் நீங்கி நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இந்த தெய்வங்கள் எல்லாமே மன தைரியத்தை கொடுக்கும் தெய்வங்கள்.

- Advertisement -

குறிப்பாக நரசிம்ம சுவாமியை வழிபாடு செய்தால் எந்த ஒரு கெடுதலும் நம்மை நெருங்காது. எந்த ஒரு பயமும் நம் மனதில் எழாது என்று சொல்லுவார்கள். ஆகவே நரசிம்ம ஸ்வாமி சன்னிதானம் உள்ள கோவில் உங்களுடைய வீட்டின் அருகில் இருந்தால், அடிக்கடி அந்த கோவிலுக்கு சென்று வரும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தினமும் அவரை தரிசனம் செய்யுங்கள். அந்த கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து நரசிம்மரை கண்குளிர பார்த்து வழிபாடு செய்தாலே உங்களுக்கு பலம் கிடைத்து விடும்.

மேல் சொன்ன எந்த கோவிலும் எங்கள் வீட்டின் அருகில் இல்லை என்பவர்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். பெரும்பாலும் எல்லா கோவிலிலும் துர்க்கை அம்மனுக்கு சன்னிதானம் இருக்கும். தினமும் துர்கை அம்மனுக்கு இரண்டு விளக்கு ஏற்றி, துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக மண்டியிட்டு, அதாவது முட்டி போட்டு வரங்களை கேட்டால் நீங்கள் கேட்கும் வரங்களை உங்களுக்கு அந்த தேவி மறுக்காமல் வழங்கி விடுவாள். மன தைரியம் வேண்டும் என்று தினமும் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய பயம் பறந்தோடிவிடும். துணிச்சல் துணிவாக மனதில் நிற்கும்.

- Advertisement -

கொஞ்சமாக சுத்தமான பசு சாணம் விபூதி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த விபூதியை கொண்டு போய் கோவிலில் கொடுங்கள். குறிப்பாக மேல் சொன்னபடி நரசிம்மர், வாராஹி, துர்கை, பிரத்தியங்கிரா தேவி, கோவில்கள் இருந்தால் அந்த கோவிலுக்கு இந்த விபூதியை கொண்டு போய் கொடுத்து அந்த சுவாமியின் பாதங்களில் வைத்து ஒரு அர்ச்சனை செய்து தர சொல்லுங்கள். அந்த விபூதியை திரும்பவும் நீங்களே வாங்கி வந்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்‌. அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க பணப்பெட்டியில் நீங்கள் பத்து ரூபாய் வைத்தாலும் அது பல ஆயிரமாக பெருக, மரிக்கொழுந்துடன் இந்த இரண்டு பொருள்களை ஒன்றாக சேர்த்து வைத்து விடுங்கள். வீட்டில் பணம் இல்லை என்ற நிலை வரவே வராது.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். மன தைரியம் பிறக்கும். கோழைத்தனம் நீங்கும். எதைக் கண்டும் பயப்பட மாட்டீங்க. தைரியமா செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றியை காண்பீர்கள் என்ற இந்த தகவலோடுன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -