உங்க பணப்பெட்டியில் நீங்கள் பத்து ரூபாய் வைத்தாலும் அது பல ஆயிரமாக பெருக, மரிக்கொழுந்துடன் இந்த இரண்டு பொருள்களை ஒன்றாக சேர்த்து வைத்து விடுங்கள். வீட்டில் பணம் இல்லை என்ற நிலை வரவே வராது.

mahalakshmi Marikozhunuthu
- Advertisement -

பணம் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று யாருக்கும் சொல்லி புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் தான் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே இந்த பணத்தை தேடி அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தினம் தினம் பாடுபட்டு உழைத்து சம்பாதித்தாலும் கூட நம்மால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் சம்பாதித்து சேர்க்க முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணம் சம்பாதிக்கும் பணம் நமக்கு சரியான முறையில் செலவழிவது கிடையாது. நாம் சம்பாதிக்கும் பணம் நம் கையில் தங்கி பெருக நமக்கு சுக்கிரனுடைய அனுக்கிரகம் மிக மிக முக்கியம். அந்த அனுகிரகத்தை எப்படி நாம் பெறுவது என்பதை பற்றிய ஒரு தகவலை தான் இப்போது இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணம் பல மடங்கு பெருக சுக்கிர யோகம்
இந்த பரிகாரத்தை சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். அதை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமையில் செய்யும் போது மேலும் விசேஷமான பலனை கொடுக்கும். வெள்ளிக்கிழமையானது மகாலட்சுமி தாயாருக்கும் உகந்த நாள். இந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்யும் போது நம் இரண்டு செல்வாதிபதிகளின் அனுகிரகத்தையும் ஒரு சேர பெற முடியும்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு வெள்ளை நிற காட்டன் துணி ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். இது ஒரு சிறிய கைகுட்டை அளவு இருந்தால் கூட போதும். அத்துடன் ஒரு கட்டு மரிக்கொழுந்து, ஒரு தாழம்பூ, பச்சை கற்பூரம் இவை அனைத்தும் இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதல் நாளே வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பிரம்ம முகூர்த்த வேளையிலேயே பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு அன்றைய தினம் சுக்கிர ஓரையில் இந்த வெள்ளை நிற துணியை பூஜையறையில் தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்த பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் ஒன்றாக வையுங்கள். பச்சை கற்பூரத்தை கொஞ்சம் அதிகமாகவே வைத்து வெள்ளை நிற நூலல் ஒரு முடிச்சு கட்டி தாயாரின் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த முடிச்சை உங்களுடைய பணப்பெட்டியில் அல்லது நீங்கள் பணம் வைக்கும் எந்த இடமாக இருந்தாலும் அங்கே இந்த முடிச்சை வைத்து விடுங்கள் இவ்வளவு தான் பரிகாரம். இந்த முடிச்சில் உள்ள வாசம் குறைய ஆரம்பிக்கும் போது நீங்கள் வேறு ஒரு முடிச்சு மாற்றி வைத்துக் கொள்ளலாம். அப்படி மாற்றும் போது பழைய பொருட்களை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இந்த முடிச்சில் உள்ள அனைத்துமே சுக்கிரனுக்கு உகந்த பொருள்கள். இவை அனைத்தையும் சுக்கிர ஹோரையில் செய்து மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தோடு நீங்கள் உங்கள் பணப்பெட்டியில் வைக்கும் போது அதில் வைக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் நல்ல முறையில் செலவழிந்து பணம் பெருகிக் கொண்டே செல்லும். அது போல பணம் இல்லை என்ற வார்த்தை இல்லாத அளவிற்கு அந்த இடத்தில் பணம் சேர்ந்து கொண்டே செல்லும்.

இதையும் படிக்கலாமே: ஐந்து வெள்ளருக்கன் உங்க கையில் இருந்தா போதும் நீங்க நினைத்தயாவையாவும் உங்கள் வசம் ஆகும். வாழ்க்கையின் அனைத்து இன்னல்களும் தீர எளிமையான வெள்ளருக்கன் பரிகாரம்.

நியாயமான முறையில் உழைத்து சம்பாதித்து பணத்தை நல்ல முறையில் சேமித்து பல மடங்கு பெருக்கி வாழ நமக்கு சுக்கிர யோகம் நிச்சயமாக தேவை. ஒருவருடைய வாழ்க்கையில் சுக்கிர திசை இல்லாமல் அவர்கள் செல்வ நிலையை அடைவது கடினம். இந்த பரிகாரத்தின் மூலம் சுக்கிர வசியத்தை செய்து பணத்தை பல மடங்கு பெருக்கி நல்ல முறையில் வாழலாம் என்று தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -