மனதில் ஆறாத வடுவாய் நிற்கும் பெரிய கஷ்டத்திற்கு, பெரிய காயத்திற்கு கூட தீர்வு தரும் பெருங்காயம்.

sad
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரூபத்தில் ஏதோ ஒரு பிரச்சனை மனதில் ஆறாத வடுவாய் இருக்கத்தான் செய்கின்றது. உங்கள் மனதை கஷ்டப் படுத்தக் கூடிய எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு தீர்வை கொடுக்கக் கூடிய சக்தி இந்த பெருங்காயத்திற்க்கு உண்டு. நம்முடைய உடம்பில் அடிப்பட்டு ஏற்படக்கூடிய பெரிய காயத்தை கூட சீக்கிரத்தில் மருந்து போட்டு சரி செய்து விடலாம். ஆனால் நம் மனதில் ஏற்படும் காயத்தை சரிசெய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. எதிரிகளின் கடுமையான எதிர்ப்பால், எதிரிகள் கொடுக்கும் தொல்லையாலும் மனதால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி, அல்லது உங்களுடைய வாழ்க்கைத் துணையைப் பிரிந்து மனதளவில் நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும் சரி, பண பிரச்சனையில் சிக்கி கஷ்டப்பட்டு வந்து இருந்தாலும் சரி, உங்களுடைய குடும்பம் மன நிம்மதியில்லாமல் குழப்பத்தில்  இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட மனக்கசப்பு உங்களுக்குள் இருந்தாலும் அதை இந்த பரிகாரத்தின் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.

தாந்திரீக ரீதியான அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. செய்வதில் அப்படி ஒன்றும் பெரிய கஷ்டம் கிடையாது. இந்த பரிகாரத்திற்கு காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாட்டில் கட்டாயம் தேவைப்படும். காபித்தூள் பாட்டில் இருந்தால் கூட போதும். அதை கழுவி விட்டு பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டி பெருங்காயம் சிறிதளவு, வென்கடுகு ஒரு கைப்பிடி, இந்த 2 பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய மனதில் இருக்கும் கஷ்டத்தை எழுத வேண்டும்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக ‘பிரிந்த வாழ்க்கைத்துணையுடன் சேரவேண்டும்’ என்று எழுதலாம். இருக்கக்கூடிய ‘கடன் பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதலாம். குறிப்பிட்ட அந்த ‘எதிரியின் தொல்லை தீரவேண்டும்’ என்று எழுதலாம். இப்படி உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய எந்த பிரச்சனை ஆழமாக கஷ்டத்தை கொடுக்கின்றதோ, மனதை காயப்படுத்துகிறதோ அந்த பிரச்சனையை எழுதலாம். குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை எழுதி உங்களுடைய பிரச்சனையை எழுத வேண்டும்.

அதாவது ‘சரவணன் என்ற எதிரியால் எனக்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த எதிரி என் பிரச்சனையில் தலையிட கூடாது’. இப்படி குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை எழுதி அந்த நபரை மனதார நினைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி வெள்ளைக் காகிதத்தில் உங்கள் கஷ்டத்தை எழுது சுருட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தயாராக எடுத்து வைத்திருக்கும் அந்த பாட்டிலில் ஒரு கைப்பிடி அளவு வெண் கடுகு, சிறிய பெருங்காய துண்டை போட்டு கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் பிரச்சினையை எழுதிய காகிதத்தை சுருட்டி அந்த பாட்டிலுக்குள் போட்டு பாட்டிலை மூடி யார் கண்ணுக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தாங்க. நாற்பத்தி எட்டு நாட்கள் அப்படியே விட்டு விடுங்கள். உங்களுடைய மனதை காயப்படுத்திய எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு உண்டான ஒரு தீர்வினை அந்த ஆண்டவன் நிச்சயம் காண்பித்துக் கொடுப்பான். (காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலுக்குள் வென்கடுகு ஒரு கைப்பிடி, சிறிய துண்டு கட்டி பெருங்காயம், பேப்பரில் உங்கள் பிரச்சனையை எழுதி அந்த பாட்டிலுக்குள் போட்டு மூட போகிறீர்கள். பரிகாரம் இதுதான்.) நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய மனதில் இருக்கும் பாரம் குறையும். மனசு லேசாகும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -