மன குழப்பத்தில் இருந்து வெளிவர செய்ய வேண்டிய பரிகாரம்.

sad
- Advertisement -

சில பேருடைய வாழ்க்கை சாதாரணமாக எல்லோரையும் போல சகஜமாக செல்லும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். அவர்கள் எடுத்த சின்ன முடிவு வாழ்க்கையில் பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கும். நான் இதுநாள் வரை நன்றாகத் தான் இருந்தேன். இதுநாள் வரை இப்படி நடந்ததில்லை, இதுநாள் இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை, அன்று ஏதோ ஒரு கெட்ட புத்தி, நான் செய்த சின்ன தவறு, வாழ்க்கையில் என்னை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.

அதற்குப் பிறகு நான் எடுக்கக்கூடிய எந்த முடிவுகளுமே எனக்கு சாதகமாக அமையவில்லை. வாழ்க்கையை ஏதோ ஒரு கோளாறாக மாறிவிட்டது. என்னுடைய புத்தி கோளாறாகிவிட்டது. சீரும் சிறப்போடும் இருந்தவர்கள் திடீரென்று வாழ்க்கையில் சீர்குலைந்து போய் இருப்பார்கள். இப்படி உங்களுடைய வாழ்க்கையை சீர்குலையே செய்யும் தப்பு தப்பான முடிவுகளை எடுக்க வைக்கும் அந்த புத்தி மயக்கத்தில் இருந்து எப்படி தெளிவது. இதற்கான தீர்வை தெரிந்துகொள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படிங்க.

- Advertisement -

மனக்கோளாறு சரி செய்யும் பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள். 3 கிராம்பு, 5 வரமிளகாய், 9 மிளகு, இந்த கணக்கில் மூன்று பொருட்களையும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். அது சில்வர் தட்டு பித்தளை தட்டு எதுவாக இருந்தாலும் சரி. எச்சில் படாத தட்டாக பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு காய்ச்சாத பசும்பாலை எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரில் முதலில் இரண்டு உள்ளங்கை களையும் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு முதலில் இடது கையால் காய்ச்சாத பசும்பாலை எடுத்து, உங்களுடைய வலது கை உள்ளங்கைகளில் ஊற்ற வேண்டும். அந்த பால் அப்படியே அந்த தட்டில் இருக்கும் மூன்று பொருட்களிலும் விழ வேண்டும்.

- Advertisement -

இந்த மூன்று பொருட்களும் சேர்த்து பாலாபிஷேகம் செய்யப் போறீங்க. அதை உங்கள் கைகளால் செய்யப் போறீங்க. உங்கள் கைகளில் மீது விழுந்த பால் அந்த பொருட்களின் மீது விழ வேண்டும். உங்கள் உடம்பில் இருக்கும் அத்தனை கோளாறுகளையும் அந்த பால் ஈர்த்துக் கொண்டு வந்து வெளியே தள்ளிவிடும்.

இப்போது வலது கையில் அந்த பால் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு, இடது உள்ளங்கைகளில் ஊற்றுங்கள். இடது கையில் மூலமாகவும் உங்கள் உடம்பை பிடித்த அத்தனை கோளாறுகளும் மனக்குழப்பமும் அந்த பாலின் வழியாக இந்த பொருட்கள் ஈர்த்துக் கொள்ளும். அவ்வளவுதான் இரண்டு கைகளையும் மீண்டும் சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள்.

- Advertisement -

15 லிருந்து 20 நிமிடம் அந்த தட்டை யாரும் தொடாதீங்க. பிறகு யார் இந்த பரிகாரத்தை செய்தீர்களோ அவர்களே இந்த தட்டில் இருக்கும் பொருட்களையும் பாலையும் அப்படியே கொண்டு போய் கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு வரவேண்டும். தட்டோடு எடுத்துச் செல்ல முடியவில்லை என்றால் இதை ஒரு டப்பாவில் ஊற்றி கூட கொண்டு போய் அப்படியே தூரமாக போட்டுவிட்டு வந்து விடுங்கள்.

டப்பாவோடு போட்டு விடக்கூடாது. டப்பாவை திறந்து இந்த உள்ளே இருக்கும் பொருட்களை மண்ணில் கொட்டி விட வேண்டும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு நாட்களில் இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம். இந்த பரிகாரம் உங்கள் மனக்கோளாரை சரி செய்து நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் உங்கள் வாழ்க்கைக்கு சாதகமாக அமையும் படி பார்த்துக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீடு தேடி வர பரிகாரம்

பல பேருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும். சரியான முடிவு என்று ஒரு முடிவை எடுப்பீங்க. ஆனா அது உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய ஆப்பை வைத்து விடும். இப்படி தொடர் பிரச்சனையில் கஷ்டப்படுபவர்கள். இந்த பரிகாரத்தை செய்தால், இந்த பரிகாரத்தை செய்த பின்பு நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நிச்சயம் வித்தியாசத்தை காண்பீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -