மனக்குழப்பம் நீங்க பரிகாரம்

pournami
- Advertisement -

சந்திர தோஷம், சந்திர புத்தி, சந்திரம் நீசம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஜாதக கட்டத்தில் வரும் சமயத்தில் மனிதர்களுடைய மனது ரொம்பவும் குழப்பமாக இருக்கும். மனதில் நிறைய பிரச்சனைகள் இருக்கும். மன அழுத்தம் இருக்கும். இதையெல்லாம் அடுத்தவர்களிடம் இறக்கி வைக்க முடியாத சூழ்நிலை வரும்.

வெளியில் சொல்ல முடியாத இந்த கஷ்டங்களில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்தும், விடுபட செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். மனோ காரகன் சந்திரன் என்பதால், இந்த பரிகாரத்தை பௌர்ணமி தினத்தில் செய்வது இரட்டிப்பு பலனை கொடுக்கும்‌. நாளைய தினம் பௌர்ணமி திதி இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இதை நாளைய தினத்தில் செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

மனக்குழப்பம் நீங்க

இந்த பரிகாரத்திற்கு கட்டாயம் உங்களுக்கு பசும்பால்தான் தேவை. பாக்கெட் பாலில் செய்தால் பரிகாரம் முழு பலனை கொடுக்காது. ஒரு லிட்டர் அளவு பசும்பால் வாங்கிக்கோங்க. வீணா போகுதே என்று இதற்கும் கவலைப்படாதீங்க. சிரமம் பார்க்காமல் ஒரு லிட்டர் பசும்பால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பௌர்ணமி தினத்தில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் குளித்து விட வேண்டும். அதாவது குளிக்கும் சமயத்திலேயே தான் இந்த பரிகாரத்தையும் செய்யணும்.

சுத்தபத்தமாக சோப்பு போட்டு குளித்து விடுங்கள். தலைக்கு குளித்து விடனும். குளித்து முடித்துவிட்டு இறுதியாக இந்த ஒரு லிட்டர் பசும்பாலை எடுத்து உங்கள் கையாலேயே, நீங்கள் உங்கள் தலையில் ஊற்றிக் கொள்ளுங்கள். சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். அதே போல உங்களுக்கு நீங்களே இந்த பாலபிஷேகத்தை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உடம்பு முழுவதும் அந்த பால் பட வேண்டும். இப்படி உங்கள் உடம்பு முழுவதும் இந்த பால் ஊற்றிய பின்பு, உங்கள் கையை கொண்டு அந்த பாலை நன்றாக உடம்பு முழுவதும் தேய்த்து விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் சாதாரண தண்ணீரை ஊற்றி குளித்து விட்டு வரலாம்.

அவ்வளவுதான் இப்படி பௌர்ணமி தினத்தில் இந்த பசும்பாலை கொண்டு குளித்தால் உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும் மனது தெளிவு பெறும். சில பேருக்கு வீட்டில் மரியாதையே இருக்காது. இவர்கள் பேசினால் யாருமே மதிக்க மாட்டாங்க, அப்படின்னு சில பேர் இருப்பாங்க. அவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய பேச்சுக்கும் அடுத்தவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிகாரம்

அதேபோல மன குழப்பம் நீங்க வேண்டும் என்றால் மாதத்தில் ஒரு முறை 7 லிட்டர் அளவு பசும்பால் வாங்கி குழந்தைகள் ஆசிரமத்திற்கு உங்கள் கையால் தானம் கொடுங்கள். மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மன அழுத்தம் குறையும் மனது தெளிவு பெறும். குழப்பமான சூழ்நிலையில் கூட நீங்க, தடுமாறாமல் இருப்பீங்க. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -