மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுக்க

vinayagar pr
- Advertisement -

ஒருவருடைய மனம் தெளிவாக இருந்தால்தான் அவருக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கமாக ஆலோசித்து அதற்குரிய தீர்வை எடுக்க முடியும். அவருடைய மனம் தெளிவாக இல்லாமல் குழப்ப நிலையில் இருந்தால் எந்த முடிவை எடுப்பது என்ற நிலையில் அவர் தடுமாறுவார். அப்படிப்பட்ட தடுமாற்றத்தை நீக்கவும் மன குழப்பத்தை அகற்றவும் தெளிவான முடிவை எடுக்கவும் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தெளிவான முடிவை எடுக்க முடியாமல் மனக்குழப்பத்திற்கு ஆளாகி இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கக்கூடிய கிரகம் தான் கேது. ஒருவருடைய ஜாதகத்தில் கேதுவால் தோஷம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே தான் அவரால் தெளிவான முடிவை எடுக்க முடியாது. அப்படிப்பட்ட கேதுவிற்கு அதிபதியாக திகழக்கூடியவர்தான் விநாயகப் பெருமான்.

- Advertisement -

கேதுவால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்குவதற்கு விநாயகப் பெருமானை நம் முறையாக வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக எமகண்ட வேளையில் தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து 10:30 மணி வரை எமகண்ட நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் பொழுது அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சனைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அதோடு அருகம்புல் மாலை இயன்றவர்கள் தங்கள் கைகளாலேயே கட்டி எடுத்துக்கொண்டு செல்லலாம். இயலாதவர்கள் கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதை தவிர்த்து ஒரு தேங்காயையும் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்.

- Advertisement -

விநாயகர் ஆலயத்திற்கு எமகண்ட நேரத்தில் சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலையை சமர்ப்பித்து விட்டு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து தேங்காய் எண்ணெயில் இரண்டு தீபம் ஏற்றி வைத்து விநாயகரை மூன்று முறை வலம் வந்து தலையில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். பிறகு எடுத்து வந்திருக்கும் ஒரு தேங்காயை மூன்று முறை வலது புறமாகவும் மூன்று முறை இடது புறமாகவும் சுற்றி சிதர் தேங்காய் போல் உடைத்து விட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் கேதுவால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும். மேலும் விநாயகர் பெருமானுக்கு சாற்றிய அருகம்புல் மாலையில் இருந்து சிறிதளவு அருகம்புல்லை மட்டுமாவது வாங்கி அதில் ஒன்றை நம்முடன் எப்போதும் இருப்பது போல் பர்சிலோ அல்லது சட்டை பாக்கெட்டிலோ வைத்திருக்க விநாயகரின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்து “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 11 முறை மனதிற்குள்ளேயே உச்சரித்து விட்டு பிறகு முடிவெடுக்க அந்த முடிவு நல்ல முடிவாக இருக்கும். மேலும் அதை நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலை விநாயகப் பெருமான் அருள்வார்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க சிதறு தேங்காய் பரிகாரம்.

மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களின் ஜாதகத்தில் கேதுவால் ஏற்படக்கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் நிவர்த்தி ஆகும்.

- Advertisement -