மன நிம்மதி தரும் தீர்த்தம்

theertham veedu
- Advertisement -

நிறைவான வாழ்வே நிம்மதியை தரும். ஏதாவது ஒரு வகையில் ஏதேனும் குறை இருந்தால் அந்தக் குறையால் நமக்கு நிம்மதி என்பது இருக்காது. நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தங்களை சுற்றி இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்க வேண்டும். எந்த அளவுக்கு நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருக்கின்றதோ அந்த அளவுக்கு நமக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நிம்மதி நிலைத்திருக்க எந்த தீர்த்தத்தை தெளிக்க வேண்டும் என்றுதான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.

புனிதமான நீரை தான் தீர்த்தம் என்று நாம் கூறுகிறோம். அனைத்து கோவில்களிலும் தீர்த்தம் கிடைக்கும். தெய்வம்சம் பொருந்திய தீர்த்தத்தை நாம் அருந்துவதன் மூலமும், நம் மேல் தெளிப்பதன் மூலமும் நம் உள்ளும், புறமும் இருக்கக்கூடிய அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.

- Advertisement -

தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்த தண்ணீரையும், கோவில் குளங்களில் இருக்கும் தண்ணீரையும், கடல் நீரையும், புனித ஆற்றின் நீரையும் தீர்த்தம் என்று தான் நாம் கூறுகிறோம். பெருமாள் கோவிலில் பச்சை கற்பூரம், துளசி, ஏலக்காய் போன்ற மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்களை சேர்த்து அங்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்குகிறார்கள். இதே போல் நாமும் நம் வீட்டில் நிம்மதி நிலைத்து இருக்கவும், வீடு சுபிட்சமாக இருக்கவும் தீர்த்தத்தை தெளிக்கலாம்.

நம் மனதிற்குள் ஏதேனும் பாரம் இருப்பது போல் உணரும் பொழுதும், சந்தோஷம் இல்லாத சூழ்நிலை ஏற்படும் பொழுதும் இந்த தீர்த்தத்தை நாம் தயார் செய்து வீட்டில் தெளிப்பதன் மூலம் நம்முடைய மனதிற்கு நிம்மதி என்பது கண்டிப்பாக கிடைக்கும். இந்த தீர்த்தத்தை நாம் தயார் செய்வதற்கு நமக்கு பன்னீர், நன்னாரி பொடி, பச்சை கற்பூரம் இவை மூன்றும் தான் தேவை.

- Advertisement -

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பன்னீரை ஊற்ற வேண்டும். அத்துடன் நன்னாரி பொடியை அதில் சேர்க்க வேண்டும். சிறிது பச்சை கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும். அதில் நம் வீட்டிற்கும் நம் வீட்டில் இருக்கும் நபர்களுக்கும் தெளிக்கும் அளவிற்கு தேவையான தண்ணீரை கலந்து கொள்ள வேண்டும்.

வேப்ப மரத்திலிருந்து புதிதாக உடைத்து வந்த வேப்பங்கொத்தை அதில் போட்டு நம் வீட்டு வாசலில் இருந்து வீடு முழுக்கவும் எல்லா இடங்களிலும் இந்த தீர்த்தத்தை தெளிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அனைத்து நபர்களின் தலையில் தெளிக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தெளிப்பதன் மூலம் நம்மிடமும், நம் வீட்டிலும் இருக்கக்கூடிய பீடைகள் என்று சொல்லப்படும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும். இதில் இருக்கக்கூடிய நறுமணமானது நம் மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். மன நிம்மதியை கொடுக்கும். மேலும் இந்த பொருட்கள் அனைத்தும் மகாலட்சுமியின் அம்சத்தை பெற்று இருப்பதால் மகாலட்சுமியின் கடாட்சமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நிம்மதியான குடும்பத்தை பெற நிலை வாசலில் இந்த பொருளை வையுங்க. நிம்மதியை நிலை குலைக்கும் அத்தனை கெட்ட சக்திகளையும் இது அழித்துவிடும்.

மிகவும் எளிமையான இந்த தீர்த்தத்தை நாமும் நம் வீட்டில் தெளித்து மனநிம்மதியையும், சுபிட்சத்தையும் பெற்று நிறைவுடன் வாழ்வோம்.

- Advertisement -