இந்த ஒரு இலையை கையில் எடுத்து சென்றால் மனதில் பயமோ, பதட்டமோ வரவே வராது. எந்த கெட்ட சக்தியும் உங்கள் வெற்றியை தடுத்து நிறுத்தாது.

thulasi
- Advertisement -

மனிதர்கள் எந்த இடத்தில் தோற்றுப் போகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. ஒரு மனிதன் எந்த இடத்தில் பயப்பட்டு, பதட்டப்பட்டு ஒரு காரியத்தை செய்கின்றானோ, அந்த இடத்தில் அவன் தோல்வி அடைகின்றான். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், ஒரு முடிவை எடுத்து விட்டால், அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. நாம் எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும் என்று எந்த ஒரு பயமும் இல்லாமல் பதட்டமும் இல்லாமல் தெளிவான மனதோடு ஒரு வேலையை செய்து முடித்து விட வேண்டும். உங்களுக்கு பயமாக இருக்கிறதா. முன்கூட்டியே அந்த வேலையை செய்யாமல் நிறுத்தி விடுங்கள். அதை விட்டுவிட்டு செய்வதற்கு விருப்பமும் இல்லாமல், செய்யாமல் விடுவதற்கு மனமும் இல்லாமல், நடுநிலையோடு எந்த ஒரு காரியத்தையும் நாம் தொடங்கக்கூடாது. தீர்மானமான தெளிவு மட்டும்தான் நமக்கு வெற்றியை கொடுக்கும்.

job

உதாரணத்திற்கு இந்த இன்டர்வியூக்கு போனா நம்மால் ஜெயிக்க முடியும் என்று நம்பினால் மட்டும் அந்த இன்டர்வியூக்கு போங்க. இந்த வேலை நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம். மனது ஊசலாடிக் கொண்டே இருக்கிறது என்றால் அந்த இன்டர்வியூக்கே போகாதீங்க.

- Advertisement -

ஒரு தொழில் என்றால் இந்த முடிவை எடுக்கலாமா வேண்டாமா என்ற மனது அலை பாய்கிறது. இந்த முடிவை எடுத்தால் வெற்றி நிச்சயம் என்று தோன்றும் போது மட்டும் முடிவெடுக்க வேண்டும். இல்லையா அந்த முடிவு எடுப்பதை நிறுத்தி விடுங்கள்.

thulasi-madam

அலைபாய்ந்து கொண்டே இருக்கும் மனதோடு நாம் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. சரி நீங்கள் என்னதான் சொன்னாலும் எங்களுடைய மனது அதை ஏற்கவில்லை. எல்லா விஷயத்திலும் எங்களுக்கு பயம். எல்லா விஷயத்திலும் எங்களுக்கு ஒரு நடுக்கம். இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர, குழப்பத்திலிருந்து விடுபட, தெளிவான மனதைப் பெற ஆன்மீகத்தில் ஏதாவது பரிகாரம் உண்டா. இருக்குங்க அப்படி உங்களுடைய மனது அலைபாயும்போது கையில் இந்த ஒரு இலையை எடுத்துக் கொண்டு போங்க. மனது ஒருநிலைப்படும் அது எந்த இலை.

- Advertisement -

மன பயத்தையும் பதட்டத்தையும் போக்கும் இலை:
துளசி இலை தாங்க. வீட்டில் இருந்து செல்லும்போது உங்க வீட்டில் துளசி செடி இருந்தால் அதிலிருந்து இரண்டு இலைகளை பறித்து கையில் வைத்துக் கொள்ளுங்கள், அல்லது ஜோபியில் பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போற காரியம் உங்களுக்கு சாதகமாக அமையும். யார் உங்களை குழப்பி விட்டாலும் உங்களுடைய மனது தெளிவாக இருக்கும். குழப்பம் அடையாது. அது இல்லாமல் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் உங்களுக்கு நடக்க போகும் நன்மையை வந்து தடுத்து நிறுத்தாது.

சில பேர் இருக்காங்க. சரியான முடிவை எடுத்து வீட்டிலிருந்து கிளம்புவாங்க. இடையில் யாராவது ஒருதவங்க, நண்பரோ உறவினர்களோ வந்து பேசுவாங்க. அவர்களிடம் பேசிய பிறகு, இவர்கள் குழம்பி விடுவார்கள். அச்சச்சோ நாம் எடுத்த முடிவு சரியா தவறா தெரியவில்லையே என்று குழப்பத்தில், அவர்கள் எடுத்த சரியான முடிவை யும் மாத்திக்குவாங்க. ஆகவே உங்கள் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். அதை விடுத்து அனாவசியமாக அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு குழம்பினால், குழம்பிய குட்டையில் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியாது. குழம்பிய உங்கள் மனதில் நிச்சயம் தெளிவான முடிவை எடுக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: பர்ஸில் இருக்கும் கடைசி 10 ரூபாய் செலவு ஆவதற்குள், 100 ரூபாய் கை செலவுக்கு வந்து சேரும். இந்த ஒரு பொருள் உங்கள் பர்சஸுக்குள் இருந்தால்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுடைய கையில் ஒரு துளசி இலை இருந்தால், உங்கள் மனது அடுத்தவர்கள் சொல்லும் பேச்சைக் கேட்டு குழம்பாது. ஏதோ ஒரு நம்பிக்கை, நாம் எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும் என்பதை உங்களுக்கு தரும். அந்த தைரியம் தாங்க வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும். அதற்கு உங்களுக்கு தேவையான ஒரே ஒரு இலை. இந்த துளசி இலை தான். எப்போதும் இதை கையில் வைத்து பாருங்கள். உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -