மனதில் ஏதோ இனம் புரியாத பயம் இருக்கிறதா? தொட்ட காரியங்கள் அனைத்திலும் ஏதாவது தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா? துர்க்கை அம்மனை இந்த முறையில் வழிபட்டு பாருங்கள் தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும்.

durgai
- Advertisement -

ஒரு மனிதனுக்கு எது இருக்கிறதோ இல்லையோ தைரியம் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். தைரியம் இருந்தால் தான் எந்த ஒரு முயற்சியையும் நம்மால் செய்ய முடியும். அவ்வாறு நாம் முயற்சிகளை செய்தால் தான் நம்மால் அந்த முயற்சிகளில் வெற்றி பெற முடியும். தைரியம் இல்லாத கோழைகளால் எந்த முயற்சியையும் செய்ய முடியாது. ஏன் அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாது. அப்படிப்பட்ட தைரியத்தை தரக்கூடிய அற்புத தெய்வமாக திகழக் கூடியவர் தான் துர்க்கை அம்மன். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் துர்க்கை அம்மனை எப்படி வழிபட்டால் பயம் நீங்கி தடைகள் அனைத்தும் விலகும் என்று தான் பார்க்க போகிறோம்.

எதிரிகளை அழிக்கக்கூடிய வல்லமை படைத்த பெண் தெய்வங்கள் ஒருவராக திகழக்கூடியவர்தான் துர்க்கை அம்மன். நமக்கு எதிராக செயல்படக்கூடிய அனைத்தும் எதிரிகள் தான். நமக்கு எதிராக நம் முன்னேற்றத்தை தடை செய்யும் எந்த ஒரு நபரும், செயலும் நமக்கு எதிரியாக தான் இருப்பார்கள். நம்முள்ளே இருக்கக்கூடிய எதிரிகளான பயம், கோழைத்தனம் போன்றவற்றையும் நீக்குவதற்கு துர்க்கை அம்மன் நமக்கு அருள் புரிவார். இது மட்டும் அல்லாமல் நாம் வேண்டும் வேண்டுதலை நிறைவேற்றித் தரும் தாயாக துர்க்கை அம்மன் விளங்குகிறார்.

- Advertisement -

எந்த நேரத்தில் நமக்கு பயம் என்ற ஒன்று ஏற்படுகிறதோ, எந்த நேரத்தில் நாம் செய்யும் முயற்சிகளில் தடங்கல்களும், தடைகளும் ஏற்படுகிறதோ அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த சிவாலயத்தில் வீற்றிருக்கக் கூடிய துர்க்கை அம்மனை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் பொழுது நாம் அவருக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய செவ்வரளி பூக்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். பிறகு அந்த அம்மனுக்கு அகலில் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

உங்களால் முடிந்தால் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யலாம். முடியாதவர்கள் இரண்டு கைகளையும் கூப்பி மனதார அந்த அம்மனின் திருவடிகளில் சரணாகதி அடைந்து வேண்டுதலை வைக்க வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் துர்க்கை அம்மன் மனதில் இருக்கக்கூடிய பயங்களை நீக்கி காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளையும், தடங்கல்களையும் தூள் தூளாக ஆக்கிவிடுவாள் என்பது நிதர்சனமான உண்மை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பை உங்களிடம் இருக்கும் வரை பணமும் உங்களுடன் இருந்து கொண்டே இருக்கும். பண வரவிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து பணவரவு வந்து கொண்டே இருக்கும்.

அம்மா என்று கூப்பிட்டதும் ஓடோடி வந்து பிள்ளையை தூக்கும் தாயைப்போல் நமக்கு ஏற்பட்டிருக்கும் பயங்களையும், தடைகளையும், எதிரிகளையும் நீக்கி நம் வாழ்க்கையை மேன்மை அடையச்செய்ய துர்க்கை அம்மன் நமக்கு பரிபூரணமாக அருள் புரிவார்.

- Advertisement -