இந்த ஒரு பை உங்களிடம் இருக்கும் வரை பணமும் உங்களுடன் இருந்து கொண்டே இருக்கும். பண வரவிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து பணவரவு வந்து கொண்டே இருக்கும்.

velvet bag money
- Advertisement -

எந்த ஊருக்கு போனாலும், எந்த நாட்டிற்கு போனாலும் பணம் என்ற ஒன்று நம்மிடம் இருந்தால்தான் நம்மால் உயிர் வாழ தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும். அதனால்தான் அந்த பணத்திற்காக பலரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு உழைத்தாலும் சில பேருக்கு அவர்கள் சம்பாதித்த பணம் கையில் தாங்காமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவர்களை விட்டு செல்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மகாலட்சுமி தாயாரின் அருள் பெற்ற பொருட்களை ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்வதன் மூலம் பணத்தை தங்களிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும். எந்த பையில் எந்த பொருட்களை எப்படி போட்டால் பணம் நிலையாக நிலைத்திருக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் உயிர் வாழ்வதற்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் என்பது அத்தியாவசியமானதாகும். இவை அனைத்தையும் பெறுவதற்கு நம்மிடம் பணம் என்ற ஒன்று இருக்க வேண்டும். ஆதலால் தான் உயிர் வாழ தேவையான முக்கியமான விஷயங்களில் பணமும் ஒன்று என்று நாம் அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறு ஓடி பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் இருந்தால்தான் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

- Advertisement -

அப்படிப்பட்ட பணம் நம்மிடம் நிரந்தரமாக இருப்பதற்கு செய்யக்கூடிய எளிமையான அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான் பார்க்கப் போகிறோம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை சுக்கிர ஹோரையில் செய்வது மிகவும் சாலச் சிறந்தது அல்லது குபேரரின் அருள் பெற்ற வியாழக்கிழமை அன்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதற்கு நமக்கு சில பொருட்கள் தேவைப்படும். அவை சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய வெல்வெட் துணி. இந்த துணியை நாம் சுருக்குப்பை போல் தைத்து தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த பையை நன்றாக துவைத்து காய வைத்து பிறகு பன்னீரில் அலசி மறுபடியும் காய வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஏழு ஒரு ரூபாய் நாணயங்கள், ஏழு கோமதி சக்கரம், ஒரு கைப்பிடி அளவு தாமரை மணி, ஒரு கைப்பிடி அளவு குன்றின்மணி மற்றும் 7 8 6 என்ற எண்ணில் முடியக்கூடிய ரூபாய் நோட்டு. எந்த ரூபாய் நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை. ரூபாய் நோட்டை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் முதலில் உப்பு கலந்த தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு சுத்தமான காய்ச்சாத பாலில் கழுவ வேண்டும். கடைசியாக பன்னீரில் மஞ்சள் தூள், ஜவ்வாது சிறிதளவு போட்டு நன்றாக கலந்து அந்த தண்ணீரில் கழுவி காய வைக்க வேண்டும்.

இப்பொழுது அந்த பையில் முதலில் ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டும். பிறகு கோமதி சக்கரம், அடுத்ததாக தாமரை மணி, அடுத்ததாக குன்றின்மணி, கடைசியாக ஒரு ரூபாய் நாணயம் என்று ஒன்றன்பின் ஒன்றாக வைக்க வேண்டும். வைத்துவிட்டு இந்த பையை நம்முடைய உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தால் மகாலட்சுமி மந்திரத்தையும், வியாழக்கிழமை செய்வதாக இருந்தால் குபேரரின் மந்திரத்தையும் 108 முறை உச்சரித்து சாம்பிராணி தூபம் காட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த பை தொடர்ந்து ஐந்து நாட்கள் பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். ஐந்து நாட்களும் இந்த பைக்கு நாம் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். ஆறாவது நாளிலிருந்து நம்முடன் எப்பொழுதும் இந்த பை இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நம்முடனே இந்த பை இருப்பதன் மூலம் பணவரவிற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். மேலும் தேவையற்ற செலவுகள் குறைந்து பணவரவு என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: கோடிக்கணக்கில் கடன் இருந்தால் கூட இந்த நேரத்தை தவற விடாமல் இதை மட்டும் செய்து விட்டால் போதும் ஒரு ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் முழு கடனை நிச்சயம் விரைவில் அடைத்து விடலாம்.

எளிமையாக அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து நாம் பூஜை செய்து மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற்று பணத்தை என்றும் நிலையாக நம்மிடம் வைத்திருப்போம்.

- Advertisement -