மனக்குழப்பத்தை நீக்கும் வழிபாடு

pillaiyar1
- Advertisement -

பெரிய அளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது நம்முடைய மனசு குழம்பிவிடும். மனசு குழம்பி விட்டால் புத்தியை சரியாக செயல்பட விடாது. மனதில் தடுமாற்றம் உண்டாகும் போது, புத்தியில் தானாக தடுமாற்றம் வந்துவிடும். தானாக பயம் எழும். பயத்தை கடப்பதற்குள் தோல்வி நம்மோடு வந்து ஒட்டிக் கொள்ளும்.

ஆகவே மனக்குழப்பம் இருக்கும் சமயத்தில் ஆன்மீக ரீதியாக நாம் என்ன வழிபாடை செய்வது. குழப்ப நிலையில் இருந்து உடனடியாக மீளவும், மனதை தெளிவுபடுத்தவும் என்ன செய்யணும். ஆன்மீகம் சார்ந்த எளிமையான வழிபாடு இதோ உங்களுக்காக.

- Advertisement -

மனக்குழப்பம் நீங்க சந்திரன் வழிபாடு

புத்திகாரகன் சந்திரன். சந்திரனுக்கு உரிய நிறம் வெள்ளை. குழப்பமான சூழ்நிலையில் இருக்கீங்க. ஏதோ சிக்கலில் சிக்கீடிங்க. நாளைக்கு அந்த பிரச்சனை முடிக்க வெளிய போறீங்கன்னா, வெள்ளை நிற ஆடையை பயன்படுத்தவும். முடிந்தவரை வெள்ளை நிற கைக்குட்டையை யாவது உங்க பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் ஒரு வெள்ளை நிற துப்பட்டாவை ஆவது மேலே போட்டுக் கொண்டு போகும். இது உங்களுடைய குழப்ப நிலையை சரி செய்ய ஒரு சின்ன பரிகாரம். இதோடு சேர்த்து பிள்ளையாரை கும்பிடனும். பிறகு நவகிரகங்களில் சந்திர பகவான் இருப்பார் அவருக்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பூ வாங்கிக் கொண்டு போய் கொடுத்து, உங்க பேரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த சந்திர பகவானுக்கு 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனக்குழப்பம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

11 நாள் இந்த விளக்கை ஏற்றலாம். 3 நாள் இந்த தீபத்தை ஏற்றலாம் அல்லது 48 நாளும் ஏற்றலாம். அது உங்களுடைய மனநிலை பொறுத்தது. பிரச்சினையை பொறுத்தது. பிரச்சினை ரொம்பவும் பெருசாக இருந்தால் 48 நாள் கட்டாயம் இந்த தீபத்தை ஏற்றுங்கள். பெரிய அளவில் இருக்கும் மன குழப்பம் கூட சரியாகிவிடும். இது தவிர, தினமும் சந்திர பகவான் வானத்தில் உதயம் ஆவார்.

மாலை நேரத்தில் சந்திர தரிசனத்தை பார்த்து சந்திர பகவானே என்னுடைய குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை மேற்கொண்டு வந்தாலே போதும். உங்கள் மனது எப்போதும் தெளிவாக இருக்கும்.  மனசு மட்டும் கிடையாதுங்க. வெற்றி காண்பதற்கு இன்னொரு விஷயமும் நமக்கு தேவை. உடம்பு, மனசு, புத்தி இது மூன்றும் ஒரு சேர நமக்கு சுகமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை வரம் தரும் வாராஹி வழிபாடு

ஆகவே உடம்பை ஆரோக்கியத்தோடு வச்சுக்கணும். மனசை குழப்பம் இல்லாமல் வச்சுக்கணும். புத்தியை கூர்மையாக வச்சுக்கணும். சில பேரிடம் பேசும் போதே நம்முடைய குழப்பத்திற்கு தெளிவு கிடைத்துவிடும். சில பேரிடம் பேசினால் நல்லா இருக்க நம்மை கூட, குழப்பி விட்டுட்டு போயிருவாங்க. உங்களை குழப்பிவிடும் மனிதர்களை உங்களை விட்டு தூர தள்ளி நிறுத்துங்கள். உங்களை தெளிவுபடுத்தக்கூடிய மனிதர்களை உங்க கூடவே வச்சுக்கோங்க. வெற்றியும் உங்களுடனே இருக்கும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -