மன வேதனை, உடல் வேதனையை போக்கும் முருகன் மந்திரம்! தினமும் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானே நேரில் வந்து அருள் தருவார்.

murugan-om
- Advertisement -

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான். பல ஆயிரம் வருடத்திற்கு முன்பு கடவுள், மனித அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து நல்லது செய்தார். இந்த கலியுகத்தில் கடவுள் நேரில் வரப்போவது கிடையாது. ஆனால் ஏதாவது ஒரு மனிதன் ரூபத்தில் அந்த கடவுள் வந்து நிச்சயமாக நமக்கு உதவி செய்வார். நம்பியவர்களுக்கு அந்த முருகன் கண்கண்ட தெய்வம் தான். அதை அனுபவபூர்வமாக நிறைய பேர் நிறைய விஷயங்களில் உணர்ந்து இருப்பார்கள். அப்படிப்பட்ட முருக பெருமானின் அற்புதம் வாய்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

ஏதாவது ஒரு பிரச்சனையின் மூலம் அதிகமாக மன உளைச்சலில் சிக்கியவர்கள், மன கஷ்டத்தில் இருப்பவர்கள், மனவேதனையில் இருப்பவர்கள், மனக்குழப்பத்தில் இருப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்யலாம். சிலபேர் ஒரு படி மேலே போய் மன நோயாளிகளாகவே மாறி விடுவார்கள். எதையோ இழந்தது போல இருப்பார்கள். அவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ரொம்பவும் உடல்நிலை சரியில்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உடல்நிலை மனநிலை சரியில்லாதவர்களுக்காக, அடுத்தவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் நிச்சய பலன் கிடைக்கும்.

- Advertisement -

மனநோய் உடல்நோய் தீர்க்கும் முருகர் வழிபாடு:
எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தினமும் செய்தாலும் தவறு இல்லை. காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். பூஜை அறையில் உங்கள் முன்னால் ஒரு தட்டில், மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் கற்பூராதி தைலம் மூன்று சொட்டு விட்டு, ஒரு ஏலக்காய் போட்டு, விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இந்த விளக்கின் முன்பு அமர்ந்து முருகப்பெருமானை மன்னதார வேண்டி அழைத்து உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள். (கற்பூராதி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்).

அதன் பின்பு பின் சொல்லப்படும் இந்த முருகர் மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை உச்சரிக்க வேண்டும். பிறகு சிறியதாக இரண்டு கற்கண்டு நெய்வேதியமாக வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய முருகப்பெருமான் இந்த மந்திரத்தை சொல்லி அழைத்தால் நிச்சயம் உங்களுக்கு ஏதாவது ஒரு மனித ரூபத்தில் வந்து கஷ்டத்துக்கான, துன்பத்திற்கான விடிவு காலத்தை பிறக்கச் செய்வான். உங்களுக்கான முருகர் மந்திரம் இதோ!

- Advertisement -

ஓம் பாலசுப்பிரமணிய, மஹா தேவி புத்திர,
சுவாமி வர வர சுவாஹா.

மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு மனதார அந்த விளக்கை இரண்டு நிமிடம் பாருங்கள். விளக்கோடு பேசுங்கள். உங்கள் முன்பு இருப்பது முருகப்பெருமான் என்று நம்புங்கள். முருகனினை நம்பியவர்கள் யாரும் இதுவரை கைவிடப்பட்டது இல்லை. உணர்ந்தவர்களுக்கு முருகப்பெருமான் வெறும் கல்லில்லை. கண்மூடித்தனமான நம்பிக்கையும் இல்லை. அவன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என்பது நிச்சயம் புரியும். நீங்களும் முருகப் பெருமானை உணர்ந்து அனுபவப் பூர்வமாக மனம் உருகி வேண்டும் போது முருகனின் அருளை நிச்சயமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கூரை வீட்டில் வாழ்பவர்களும் குபேரர்களைப் போல வாழ மகாலட்சுமி தாயாருக்கு இந்த பச்சை கற்பூர வழிபாடு செய்யுங்கள். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் மகாலட்சுமி வழிபாடு.

உங்களுக்கு வாழ்க்கையில் சோதனைகளை கொடுப்பது, நீங்கள் சாதனைகளை படைக்கத்தான். இனி சோதனை காலம் முடிந்து விட்டது. வரப்போவது சாதனை படைக்க கூடிய காலம். கஷ்டப்படுபவர்கள் தீர்வினை பெற மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -