கூரை வீட்டில் வாழ்பவர்களும் குபேரர்களைப் போல வாழ மகாலட்சுமி தாயாருக்கு இந்த பச்சை கற்பூர வழிபாடு செய்யுங்கள். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் மகாலட்சுமி வழிபாடு.

- Advertisement -

வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும். பண வரவு தடை இல்லாமல் மங்கள நிகழ்வுகள் எல்லாம் இனிதே நடக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதமும் அனுகிரகமும் நமக்கு வேண்டும். அப்படி அவர்களின் ஆசீர்வாதத்தை அனுகிரகத்தையும் பெறுவதற்கான ஒரு எளிய வழிபாட்டு முறையை தான் அதற்கு இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த வழிபாட்டை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை அன்று தான் தொடங்க வேண்டும். அதே போல் இந்த வழிபாட்டிற்கு மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகம் இரண்டில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டில் ஐஸ்வரியம் பெருக மகாலட்சுமி தாயார் வழிபாடு:
வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்த பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் மஞ்சள், சந்தனம், பச்சைக் கற்பூரம் மூன்றையும் ஒன்றாக குழைத்து மகாலட்சுமி தாயாருக்கு பொட்டு வைத்த பின் குங்குமம் பொட்டும் வைத்து விடுங்கள். அதன் பிறகு நல்ல மணம் மிக்க மலர்களை சாற்றிய பிறகு துளசி இலைகளையும் வைக்கலாம் அல்லது அதிகமாக இருந்தால் மாலையாக போட போது தொடுத்து போடலாம். உங்கள் வீட்டில் துளசி இல்லை என்றால் முதல் நாளே கடையில் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

அடுத்ததாக நெய்வேத்தியத்திற்கு சர்க்கரை பொங்கல் செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கல் செய்யும் போது அதிலும் கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து செய்து அதை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் தயார் செய்த பின்பு தாயாரின் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்த பிறகு துளசி இலைகளை கொண்டு அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி தாயாரின் போற்றிகள் இவைகளை படிக்கலாம். இதை எல்லாம் செய்த பிறகு நீங்கள் ஏற்றும் கற்பூர தீபாராதனையில் பச்சைக் கற்பூரம் சேர்த்து ஏற்றி தாயாருக்கு காட்டி அன்றைய பூஜை முடித்துக் கொள்ளுங்கள்.

48 நாட்கள் தொடர்ந்தும் இந்த பூஜையை செய்யலாம். அப்படி முடியாதவர்கள் 16 வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்யலாம். 16 வெள்ளிக்கிழமையில் தவறாமல் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்யும் பொழுது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்யலாம். மற்ற நாட்களில் ஒரு கட்டி வெல்லத்தை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சந்தோஷம் பொங்கி வழிய பால் பரிகாரம்

இந்த பூஜையை செய்ய ஆரம்பித்த உடனே உங்கள் வீட்டில் இருக்கும் சூழ்நிலைகள் மாறி நல்ல முறையில் பணவரவுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது நிச்சயமாக அதில் வெற்றியை காண்பீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அனுகிரத்தை மகாலட்சுமி தாயார் தருவார். இந்த நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்து அதற்கான பலனை பெறலாம்.

- Advertisement -