கணவர் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது, மனைவி இந்த ஒரு வார்த்தையை சொல்லி வழியனுப்பி வைத்தாலே போதும். குடும்பத்தில் சகல சௌபாக்கியமும் நிறைவாக இருக்கும்.

women3
- Advertisement -

ஆண்கள் வெளியே கிளம்புவதற்கு முன்பாக பெண்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக் கூடாது என்பதை பற்றி சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக இந்த விஷயங்களை எல்லாம் படித்து தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய அம்மா, நம்முடைய பாட்டி இவர்களெல்லாம் அந்த காலத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் கிளம்புவதற்கு முன்பு எந்தெந்த வேலைகளை செய்து வந்தார்களோ, அதை நாம் இப்போது செய்யத் தவறி வருகின்றோம். அதனாலேயே சில இழப்புகள், சில கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. குறிப்பிட்டு பெண்கள் இன்றைய சூழ்நிலையில் செய்யக்கூடிய சில பெண்கள் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன. பார்க்கலாம் வாங்க.

women8

முதலில் கணவர் வீட்டில் இருந்து வெளியே கிளம்புவதற்கு முன்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் குளித்து இருக்கவேண்டும். குளிக்க முடியாத சூழ்நிலை நேரமின்மை காரணமாக இருந்தாலும் பல் தேய்த்து முகத்தை அலம்பி, நெற்றியில் பொட்டு வைத்து இருக்க வேண்டும். தலைவிரி கோலத்தோடு, பல் கூட தேய்க்காமல், இரவு தூங்கிய முகத்தோடு, வீட்டில் இருக்கும் பெண்கள், ஆண்கள் வெளியே கிளம்பும்போது வழியனுப்பி வைக்கவே கூடாது.

- Advertisement -

வீட்டில் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் பிரச்சனை எது இருந்தாலும் சரி, கணவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது மனைவியிடம் ‘போயிட்டு வரேன்’ என்ற வார்த்தையை சொல்லி விட்டுத்தான் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும்.

women8

அந்த காலத்தில் போருக்கு சென்ற ஆண் மக்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் ‘சென்று வருகின்றேன்’ என்ற வார்த்தையை சொல்லி விட்டு, வீட்டில் இருக்கும் பெண்ணின் கையால் ஆசீர்வாதத்தை வாங்கிவிட்டு, வெற்றி திலகத்தை இட்டுக்கொண்டு தான் போரில் வெற்றி அடைந்து வீடு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

- Advertisement -

இதேபோல்தான் பெண்களும், கணவர் வந்து உங்களிடம் போயிட்டு வரேன் என்று சொல்லும்போது, ‘நல்லபடியாக போயிட்டு வாங்க’ என்ற ஒரு வார்த்தையை நிச்சயம் மனைவியின் வாயிலிருந்து வர வேண்டும். நம் வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஆண் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றால் கட்டாயமாக எல்லா பெண்களும் இந்த ஒரு வார்த்தையை சொல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

fight

இன்றைய சூழ்நிலையில் எல்லாம் மாறி போனது போல, இந்த பழக்கவழக்கமும் மாறிவிட்டது. ஹாய் பாய் என்று சொல்லும் இந்த காலத்தில், போயிட்டு வரேன், போயிட்டு வாங்க என்ற வார்த்தைகளே நாம் மறந்து விட்டோம்.

- Advertisement -

women3

சில வீடுகளில் சண்டை என்று இருந்தால், கணவன் வேலைக்குக் கிளம்பும்போது மனைவி வந்து வழி அனுப்பி வைக்க மாட்டார்கள். ஆனால் சண்டை சச்சரவுகள் இருந்தாலும்கூட கணவன்மார்கள் வெளியே செல்லும் போது, மனைவி வாயிலிருந்து பத்திரமாக போயிட்டு வாங்க, என்ற வார்த்தையை சொல்லும் பழக்கத்தை இனிமேல் கடைபிடிச்சுக்கோங்க. இது உங்களுக்கும் நல்லது. உங்களுடைய குடும்பத்திற்கும் மிக மிக நல்லது.

women1

இதேபோல் கணவர் வீட்டில் இருந்து வெளியே கிளம்பிய பின்பு உடனடியாக வீட்டு கதவை அடைக்கக் கூடாது. ஆண்கள் வீட்டில் இருந்து வெளியே கிளம்பிய பின்பு வீட்டில் இருக்கும் பெண்கள், அது மனைவியாக இருந்தாலும், அம்மாவாக இருந்தாலும், அக்கா தங்கைகள் ஆக இருந்தாலும், அவர்கள் உடனடியாக போய் குளிக்கவே கூடாது.

women1

இதேபோல் கணவர் வீட்டில் இருந்து கிளம்பியவுடன் வீட்டை உடனடியாக சுத்தம் செய்து, கூட்டி துடைக்கவும் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே சென்றதும் ஒரு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ கழித்து இந்த வேலைகளை நீங்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறாக மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை கடைப்பிடிக்கும் போது உங்களுடைய குடும்பத்தில் கஷ்டங்கள், இழப்புகளும் வராமல் இருக்கும். குடும்பம் செல்வ செழிப்போடு சந்தோஷமாக இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -