மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறதா? நிலையான முடிவை எடுக்க கஷ்டப்படுகிறீர்களா? இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்துப் பாருங்கள். மனம் ஒருநிலைப்பட்டு நீங்கள் செய்யும் செயலில் வெற்றி அடைவீர்கள்.

manam
- Advertisement -

மனதை நாம் குரங்குடன் ஒப்பிடுவோம். குரங்கு எப்படி மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம் மனதும் ஒரு நிலையான முடிவை எடுக்காமல் முடிவை மாற்றி மாற்றி யோசிக்கும். அலைபாயும் மனம் ஒருநிலை அடைந்தால் நாம் நினைப்பது அனைத்தையும் நம்மால் செம்மையாக செய்து முடிக்க முடியும். இந்த மந்திரம் குறித்த பதிவில் மனம் ஒருநிலைப்பட எந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

நாம் செய்கின்ற வேலையை திறமையாகவும், நல்ல முறையில் செய்து முடிக்கவும் நமது மனம் நிலையாக இருக்க வேண்டும். இந்த வாக்கியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும். படிக்கும் குழந்தைகள் மனதை ஒருநிலைப்படுத்தி படித்தால் விரைவில் மனதில் பதியும். மனம் ஒருநிலைப்படாமல் செய்யும் எந்த வேலையும் முழுமையாக நிறைவடையாது. இதனாலேயே பல பேரின் வேலைகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

- Advertisement -

பல பேர் தாங்கள் செய்யும் வேண்டுதல் நிறைவேறவில்லை என்று கடவுளை குறை கூறுவார்கள். ஆனால் அதன் உண்மையான காரணம் கடவுளை நாம் வணங்கும் பொழுது நமது மனம் கடவுளை மட்டும் நினைக்காமல் வேறு எண்ணங்களில் ஆழ்ந்து போய் இருப்பதே ஆகும். மனதில் வேறு எதையும் நினைக்காமல் கடவுளை மட்டுமே நினைத்து வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அந்த வழிபாடு நமக்கு வெற்றியைத் தரும்.

மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு தியானம் மிகவும் உதவுகிறது என்று பல பேர் கூறினாலும், இந்த மந்திரத்தை நாம் தினமும் கூறினால் நமது மனம் ஒருநிலைப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்காக நாம் விடியற் காலையில் அதாவது பிரம்ம முகூர்த்த வேளையான 4.30 முதல் 6.00 மணிக்குள் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இயற்கை சூழல் நிறைந்த பகுதியில் (வீட்டின் மொட்டை மாடியை கூட உபயோகப்படுத்திக் கொள்ளலாம்) கிழக்கு பார்த்தவாறு ஒரு பலகையின் மீது அல்லது துணி விருப்பின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் க்லாம் பைரவா (உங்கள் பெயர்) சித்தாகர் சகோ ஸ்வாஹா.

படிக்கும் மாணவர்கள் காலை எழுந்ததும் இந்த மந்திரத்தை 21 முறை கூறிவிட்டு படிக்க ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலைக்கு செல்பவர்களும், தொழில் செய்பவர்களும் தங்கள் வேலையை செய்வதற்கு முன் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள். அதே போல் பூஜை செய்வதற்கு முன்பாக நாம் இந்த மந்திரத்தை கூறிவிட்டு பிறகு பூஜை செய்ய ஆரம்பித்தால் நம் மனம் ஒருநிலைப்பட்டு நம் பூஜை விரைவில் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், தினமும் இந்த ஒரு காரியத்தை செய்த பின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வீட்டில் தன வசியம் ஏற்பட்டு கோடீஸ்வர யோகம் தானாக உங்களைத் தேடி வரும்.

இந்த அற்புதமான பைரவர் மந்திரத்தை நாம் தினமும் உச்சரித்து நம் மனதை ஒருநிலைப்படுத்தி காரிய வெற்றி அடைவோம்.

- Advertisement -